Newsஉலகின் மிக உயரமான நாய் உயிரிழந்தது

உலகின் மிக உயரமான நாய் உயிரிழந்தது

-

கின்னஸ் சாதனை படைத்த உலகின் உயரமான நாயான ஜீயஸ் (Zeus) புற்று நோயால் 3 வயதில் உயிரிழந்தது. எலும்பில் ஏற்பட்ட புற்று நோயால் ஜீயஸ் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த ஜீயஸ் 3 அடி 4.18 இன்ச் உயரம் கொண்டதாக (1.046 மீட்டர்) இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜீயஸிற்கு எலும்பு புற்று நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஜீயஸ் உயிர் பிழைக்க வைக்க வலது காலை நீக்க வேண்டிய நிலையில் மருத்துவர்கள் கடந்த 7 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அடுத்த 3 நாட்களில் லேசான காய்ச்சலும் ஜீயஸிற்கு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிசோதித்ததில் ஜீயஸிற்கு நிமோனியா காய்ச்சல் இருந்ததும், அதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அதற்கு தீவிர சிகிச்சை கொடுத்திருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(12) காலை ஜீயஸ் உயிரிழந்துள்ளது. அதற்கு நாய் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Latest news

துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு

Bondi பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் நேற்று இரவு செனட்டில் நிறைவேற்றப்பட்டன. இதில் உரிமையாளர்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்கும்...

இலவச மெட்ரோ சேவையை அதிகம் பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்கள்

சமீபத்தில் தொடங்கப்பட்ட மெட்ரோ சுரங்கப்பாதை திட்டத்தின் மூலம், விக்டோரியா மக்கள் மெட்ரோ சுரங்கப்பாதையில் இலவச வார இறுதி பயணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த கோடையில்...

Bondi நாயகன் பற்றி வெளியான சோகமான செய்தி

Bondi தாக்குதலில் இரண்டு முறை சுடப்பட்ட பிறகு, தனது கையின் அசைவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று Bondi ஹீரோ அகமது அல் அகமது...

விக்டோரியா சுகாதார ஊழியர்கள் 6% ஊதிய உயர்வு கோரி பாரிய போராட்டம்

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் தொழில்முறை வேலைநிறுத்தம் நேற்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. பணவீக்கத்திற்கு ஏற்ப 6% ஊதிய உயர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட இந்த வேலைநிறுத்தத்தில் 10,000...

சிட்னியில் அதிகரித்து வரும் சுறா தாக்குதல்கள்

கடந்த 60 ஆண்டுகளில் சிட்னியில் சுறா தாக்குதல் எதுவும் நடந்ததில்லை, ஆனால் கடந்த இரண்டு நாட்களில் இதுபோன்ற சுறா தாக்குதல்களால் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு...

Bondi நாயகன் பற்றி வெளியான சோகமான செய்தி

Bondi தாக்குதலில் இரண்டு முறை சுடப்பட்ட பிறகு, தனது கையின் அசைவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று Bondi ஹீரோ அகமது அல் அகமது...