Newsதேன்கூடுகளுக்கும் முடக்கநிலையை அறிவித்த ஆஸ்திரேலியா

தேன்கூடுகளுக்கும் முடக்கநிலையை அறிவித்த ஆஸ்திரேலியா

-

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தேன்கூடுகள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனீக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ‘Varroa Mite’ ஒட்டுண்ணி பரவுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. நியூகாசல் (Newcastle) துறைமுகத்தில் ‘Varroa Mite’ ஒட்டுண்ணி கண்டறியப்பட்டது.

அதையடுத்து கடுமையான உயிரியல் பாதுகாப்புப் பகுதி ஒன்றை அதிகாரிகள் உருவாக்கினர். அதன்படி, அந்த 50-கிலோமீட்டர் பகுதிக்குள் உள்ள தேனீக்கள், தேன்கூடுகள் ஆகியவற்றை நகர்த்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளனர்.

‘Varroa Mite’ ஒட்டுண்ணி தேனீக்களை அழித்து நாட்டின் தேன் உற்பத்தியைப் பாதிக்கக்கூடும். அதனால் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது முக்கியம் என்று ஆஸ்திரேலியத் தேனீத் தொழில்துறை மன்றம் தெரிவித்துள்ளது.

ஒட்டுண்ணியை முழுமையாக ஒழிப்பதற்காக அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மாநில முதன்மைத் தொழில்துறைகளின் பிரிவும் கூறியுள்ளது. தேன் உற்பத்தி தவிர, தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் தேனீக்கள் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...