Newsநகரின் மையத்தில் உள்ள பசுமை வீடு - கழுகாய் சுற்றும் ரியல்...

நகரின் மையத்தில் உள்ள பசுமை வீடு – கழுகாய் சுற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்

-

அவுஸ்திரேலியாவில் 30 மில்லியன் டொலர்கள் வரை விலை கொடுக்க பலர் தயாராக இருக்கும் நிலையிலும் நகரின் மையத்தில் வீட்டுடன் இருக்கும் நிலத்தை விற்க ஜம்மித் என்பவரின் குடும்பம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் பகுதியில் ஜம்மித் என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமான 1.9 ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் நடுவே 5 படுக்கையறைகள் கொண்ட வீடு ஒன்றில் ஜம்மித் என்பவரது குடும்பம் வசித்து வருகின்றனர்.

இந்த வீட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் இவர்களது வீடு அமைந்துள்ள நிலப்பகுதியை சுற்றியுள்ள பிற பகுதிகள் முழுவதும் வீடுகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

ஆனால் இவர்களது வீடு மட்டும் சுற்றிலும் பச்சையாக இயற்கையான அமைப்புடன் பெரும் நிலத்திற்கு நடுவே வீடு அமைந்துள்ளதால் மிகவும் அழகாக உள்ளது.

இந்நிலையில் ஜம்மித்தின் நிலத்தை எப்படியாவது வாங்கி அதில் வீடுகளை கட்டி விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நிலத்தை வாங்க 10 ஆண்டுகளுக்கு மேல் முயற்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் இதற்காக 30 மில்லியன் டொலர் வரை ஜம்மித் குடும்பத்திற்கு வழங்க ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர்.

ஆனால் ஜம்மித் குடும்பத்தினர் அவர்களது அழகான நிலத்தை விற்பனை செய்ய மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இது தொடர்பாக ஜம்மித் குடும்ப உறுப்பினர் டையானே ஜம்மித் பேசிய போது, இந்த பகுதி முழுவதும் ஒரு காலத்தில் விவசாய பகுதியாக இருந்தது, அதனால் இங்கு பண்ணை வீடுகள் மட்டுமே இருந்தது.

ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் வீடுகளாக உள்ளது, இருப்பினும் எங்களுக்கு இயற்கையான சூழலை விட்டு வெளியேற மனம் வரவில்லை, அதனால் இந்த நிலத்தை விற்பனை செய்யப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...