Cinemaபூகம்பமாக வெடிக்கும் ARR விவகாரம்- "உங்களுக்கு 15 நாள் தான் டைம்"

பூகம்பமாக வெடிக்கும் ARR விவகாரம்- “உங்களுக்கு 15 நாள் தான் டைம்”

-

2018-ல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாட்டில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சிக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு ரூ.29.50 லட்சம் (இந்திய ரூபா) முன் பணம் வழங்கப்பட்டது.

இசை நிகழ்ச்சி நடைபெறாத நிலையில் அந்த தொகையை திரும்ப தருமாறு ஏஆர் ரகுமானுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால், ஏ.ஆர். ரகுமான் முன்பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தரவில்லை” எனக் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து, “ஏ.ஆர்.ரகுமான் அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் மேலாளரும், தி குரூப் நிறுவனத்தின் உரிமையாளருமான செந்தில் வேலவன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், “அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் அளித்த புகாருக்கும், ஏ.ஆர். ரஹ்மானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தச் சங்கத்திடம் இருந்து இசை நிகழ்சசி நடத்த ரூ.29.50 லட்சம் வாங்கப்பட்டது.

இதற்கிடையில் நிகழ்ச்சி நடத்துவதற்கான தொகை அதிகரிப்பு காரணமாக அவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்தனர். ரத்து செய்தாலும் முன்பணத்தொகை திருப்பி வழங்கப்பட மாட்டாது என்பது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்திய அறுவைசிகிச்சை நிபுனர்கள் சங்கத்திற்கு எதிராக எ அர் ரஹ்மான் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் பதில் நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

அந்த நோட்டீஸில் ஏ.ஆர்.ரஹ்மான் தங்கள் சங்கத்திடம் உடனடியாக நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க ​வேண்டும் என்றும், நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் ரூ.15 கோடி செலுத்த வேண்டுமென்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வடகொரியா

ராணுவத் தலையீடு தொடர்பாக ஆஸ்திரேலியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் கடற்படையின் வளைகுடா பகுதியில் சீன போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் நடத்திய ராணுவ பயிற்சியே...

ஆபாசமான இணையதளங்களில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற புதிய வழிமுறை

இணையத்தில் குழந்தைகள் ஆபாசமான படங்களை பார்ப்பதை குறைக்கும் நோக்கில் சில புதிய நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய திட்டங்களின்படி, இணையதளத்தை அணுகும்போது வயது...

சர்வதேச மாணவர்களுக்கான புதிய விதிகளுக்கு எதிராக உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகத் துறை எச்சரித்துள்ளது. நேற்று காலை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச கல்வி கவுன்சில் கூடியபோது,...

இன்றைய மத்திய பட்ஜெட் பற்றிய ஒரு கணிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் 2 அல்லது 3 சதவீத இலக்கை எட்டும் என்று கருவூலம் கணித்துள்ளது. இன்றைய மத்திய பட்ஜெட் எதிர்பார்த்ததை விட ஓராண்டு முன்னதாகவே...

காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு சிறப்பு அறிவிப்பு

காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்த நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த ஆண்டு காய்ச்சல் சீசன்...

உலகின் 10 பணக்கார பெண்களின் சொத்துக்கள் பற்றி வெளியான தகவல்

இந்த ஆண்டு மே மாதத்திற்குள், ஃபோர்ப்ஸ் இதழ் உலகின் 10 பணக்கார பெண்களைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் இதழ் உலகின் பணக்கார பெண்கள் மற்றும் அவர்களின்...