Newsஆப்கானில் 20 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் – 2000 பேர் உயிரிழப்பு

ஆப்கானில் 20 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் – 2000 பேர் உயிரிழப்பு

-

ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் (07) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் அந்த நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சனிக்கிழமை ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாக நிலநடுக்கம் பதிவானது. அதைத் தொடா்ந்து, மூன்று முறை கடுமையான நிலநடுக்கங்களும், குறைந்த அளவிலான நிலஅதிர்வுகளும் உணரப்பட்டன.

நிலநடுக்கம் மற்றும் அதற்கு பிந்தைய அதிர்வுகளில் சிக்கி சுமார் 300 போ் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நிலநடுக்கத்தில் சுமார் 2,000 போ் உயிரிழந்துள்ளதாக தலிபான் அரசின் செய்தித் தொடா்பாளா் அப்துல் வாஹித் நேற்று தெரிவித்தார். ஆறு கிராமங்கள் அடியோடு அழிந்துவிட்டதாகவும், இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானோர் புதையுண்டுவிட்டதாகவும் அவா் கூறினார்.

ஹெராத் மாகாணத்தின் ஜெண்டா ஜன் மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்கள் நிலநடுக்கத்தால் பேரழிவைச் சந்தித்திருப்பதாக பேரிடா் ஆணைய செய்தித் தொடா்பாளா் முகமது அப்துல்லா தெரிவித்தார். நிலநடுக்கத்தில் சுமார் 600 வீடுகள் இடிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த ஹெராத் மாகாணம், ஈரான் எல்லையையொட்டி உள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் அருகில் உள்ள ஃபரா, பத்கிஸ் மாகாணங்களில் உணரப்பட்டதாக உள்ளூா் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தால் உயிரிழந்தவா்களுக்கு தலிபான் அரசின் துணைப் பிரதமா் அப்துல் கானி பராதா் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உள்ளூா் அமைப்புகளுக்கு தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

நிலநடுக்க பாதிப்பு பகுதிகளில் உலக சுகாதார அமைப்பும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

கிழக்கு ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதி பிராந்தியத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 1,000 போ் உயிரிழந்தனா், 1,500 போ் காயமடைந்தனா் என்பது நினைவுகூரத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

ALDI இடமிருந்து நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Home delivery சேவை

ஜெர்மன் பல்பொருள் அங்காடி ALDI, DoorDash உடன் இணைந்து ஒரு டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது ALDI இலிருந்து பொருட்களை...

அரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

'அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் திகதி அரபு லீக்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

சிட்னியில் உள்ள Haveli இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்குதல்

வடமேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு கசிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரிவர்ஸ்டனில் உள்ள...