Sportsதென்னாபிரிக்க அணி அபார வெற்றி - உலக கிண்ண தொடர் 2023

தென்னாபிரிக்க அணி அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 10ஆவது போட்டி நேற்று இடம்பெற்றது.

நேற்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அந்த வகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், அதிகபடியாக குயின்டன் டி கொக் 109 ஓட்டங்களையும், எய்டன் மார்க்ரம் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணியின் க்ளென் மெக்ஸ்வெல் 34 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து ,312 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

அணிசார்பில், அதிகபடியாக மார்னஸ் லபுஸ்காக்னே 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய அவுஸ்திரேலிய அணியின் ஏனைய வீரர்கள் 30க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணியின் காகிசோ ரபாடா 33 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.   

Latest news

சிறந்த விமானக் குழுவிற்கான முதல் இடம் ஆஸ்திரியாவுக்கு செல்கிறது

ஐரோப்பாவின் சிறந்த விமானக் குழு தரவரிசையில் ஆஸ்திரியாவின் விமானப் பணியாளர்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். இந்த தரவரிசை 2023 ஆம் ஆண்டிற்கான செய்யப்பட்டது மற்றும் ஏர் பிரான்ஸ்...

உங்கள் வீட்டில் கல்நார் இருந்தால் அவதானமாக இருங்கள்

நாட்டில் வீடுகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதில் கல்நார் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு மூன்றாவது வீட்டிற்கும் கல்நார் இன்னும் பயன்படுத்தப்படுகிறது என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்நார் ஒழிப்பு கவுன்சிலின்...

வட்டி விகித உயர்வு அபாயம் பற்றி அறிக்கை

கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய அரசின் வரவு செலவுத் திட்டமானது வட்டி விகிதத்தை அதிகரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என பல அவுஸ்திரேலியர்கள் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட்ஜெட் சிறப்பாக...

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் இறுதிச்சடங்கு இன்று

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன. விபத்தில் உயிரிழந்த அதிபர் உள்ளிட்டோருக்கு 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்...

வட்டி விகித உயர்வு அபாயம் பற்றி அறிக்கை

கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய அரசின் வரவு செலவுத் திட்டமானது வட்டி விகிதத்தை அதிகரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என பல அவுஸ்திரேலியர்கள் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட்ஜெட் சிறப்பாக...

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் இறுதிச்சடங்கு இன்று

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன. விபத்தில் உயிரிழந்த அதிபர் உள்ளிட்டோருக்கு 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்...