Newsதிருடு போன 9 மில்லியன் டொலர் பெறுமதியான தங்க கழிவறை திருட்டு...

திருடு போன 9 மில்லியன் டொலர் பெறுமதியான தங்க கழிவறை திருட்டு – 4 பேர் கைது

-

பிரித்தானியாவின் முன்னாள் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறந்த இடமான பிளென்ஹெய்ம் அரண்மனையில் நிறுவப்பட்ட 9 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கக் கழிவறை திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

04 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2019 ஆம் ஆண்டு 18 காரட் தங்க மலசலகூடம் கொள்ளையடிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களை கைது செய்ய முடியவில்லை.

சந்தேகநபர்கள் 35 மற்றும் 39 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மீது திருட்டு, சதி மற்றும் சொத்து திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் பிளென்ஹெய்ம் அரண்மனை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதன் மூலம், ஒவ்வொரு நபருக்கும் மூன்று நிமிடங்களுக்கு தங்கக் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது, மேலும் சந்தேக நபர்கள் அருகில் உள்ள ஜன்னலைப் பயன்படுத்தி அதை வெளியே எடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

திருடப்பட்ட குறித்த மலசலகூடப் பெட்டி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், உரிய நிலையில் உள்ள கழிவறைப் பெட்டியை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கும் எனவும் பிரித்தானிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி ஒக்ஸ்போர்ட் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...