டைட்டானிக் கப்பல் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.
இதில் கப்பலில் பயணித்த 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆய்வுகள் தற்போதும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக அந்த கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவு பட்டியல் ஏலத்திற்கு வர உள்ளது.
இது தொடர்பாக ஏலதாரரான ஆன்ட்ரூ ஆல்ட்ரிச் தெரிவிக்கையில், கப்பலில் பயணித்த வரலாற்று ஆசிரியரான கனடாவை சேர்ந்த லென் ஸ்டீபன்சன் என்பவர் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை வைத்திருந்தார்.
இது அவரது குடும்பத்தினர் உட்பட யாருக்கும் தெரியாது. 2017 ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு அவரது உடமைகளை அவரின் மகளும், மருமகளும் பார்வையிட்ட நிலையில் இந்த டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட மெனுவை பழைய புகைப்பட ஆல்பத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர் என தெரிவித்தார்.
விரைவில் ஏலத்திற்கு வர உள்ள அந்த மெனு கார்டில் பல உயர்தர உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்த ‘மெனு கார்டு’ 60 ஆயிரம் யூரோவிற்கு ஏலம் விடப்படுகின்றது.





