Sydneyசிட்னியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை உட்பட மூன்று சடலங்கள்

சிட்னியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை உட்பட மூன்று சடலங்கள்

-

சிட்னியின் பால்காம் ஹில்ஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தை என சந்தேகிக்கப்படும் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மரணங்கள் தொடர்பில் தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்கிழமை காலை 10.15 மணியளவில் பால்காம் ஹில்ஸின் வாட்கின்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் 30 வயதுடைய நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

வடக்கு பரமட்டாவில் உள்ள தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளர் பயிற்சி நிலையத்தில் 40 வயதுடைய தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சீன தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளரான சந்தேக நபர், இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பேற்றுள்ளதுடன், அவர் இன்னும் குறிப்பிட்ட காரணத்தை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

உயிரிழந்த குழந்தை சந்தேக நபரின் கீழ் தற்காப்புக் கலையை பயின்று வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் காயங்களுக்கும் மூன்று சடலங்களுக்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...