Sydneyசிட்னியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை உட்பட மூன்று சடலங்கள்

சிட்னியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை உட்பட மூன்று சடலங்கள்

-

சிட்னியின் பால்காம் ஹில்ஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தை என சந்தேகிக்கப்படும் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மரணங்கள் தொடர்பில் தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்கிழமை காலை 10.15 மணியளவில் பால்காம் ஹில்ஸின் வாட்கின்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் 30 வயதுடைய நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

வடக்கு பரமட்டாவில் உள்ள தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளர் பயிற்சி நிலையத்தில் 40 வயதுடைய தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சீன தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளரான சந்தேக நபர், இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பேற்றுள்ளதுடன், அவர் இன்னும் குறிப்பிட்ட காரணத்தை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

உயிரிழந்த குழந்தை சந்தேக நபரின் கீழ் தற்காப்புக் கலையை பயின்று வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் காயங்களுக்கும் மூன்று சடலங்களுக்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...