Newsஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணிலுக்கு அழுத்தம்

ஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணிலுக்கு அழுத்தம்

-

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறந்த பொருளாதார நிபுணருமான ஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு பதில் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசுவாசமான அமைச்சர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக் களத்தில் இளைய சமூகத்தின் ஈர்ப்பு ஹர்ஷ டி சில்வாவிடம் இருப்பதாகவும் நடுத்தர வர்க்க சமூகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு ரணில் நல்ல பதிலை அளித்துள்ளதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்திருந்ததாக உறுதிப்படுத்தப்படாத வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டி வழுகாராமவில் இன்று வெள்ளிக்கிழமை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதில் அரச தலைவராக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகியதன் பின்னர் பிரதமருக்கான அரசியலமைப்பு விதிகளின்படி பதில் அரச தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள இரகசிய வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளால் புதிய அரச தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

பள்ளி பருவ தேர்வுகளில் தோல்வியடைந்துள்ள 1/10 ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்கள்

ஆஸ்திரேலியாவில் 10 பள்ளி மாணவர்களில் ஒருவர் பள்ளி பருவத் தேர்வில் தோல்வி அடைவது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சித்தியடைந்த மாணவர்களை சித்தியடையச் செய்வதற்கு ஆசிரியர்கள் பெரும் முயற்சிகளை...

இலங்கை கைதிகள் பலரை விடுவிக்க தயாராக உள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு

சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களை விடுதலை செய்ய ஐக்கிய அரபு இராச்சியம் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது நிறைவேற்று ஆணையின் மூலம் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காரணமாகும். அவர்கள் வெவ்வேறு சிறைகளில்...

ஆஸ்திரேலியாவில் தகுதிகள் இருந்தபோதிலும் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் புலம்பெயர்ந்தோர்

அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர்ந்தோர் உயர் தகுதி வாய்ந்தவர்களாக இருந்தாலும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் அறிக்கைகள், நாட்டில் திறமையான...

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகளை கண்டறிந்துள்ளனர். அதன்படி, பெரும் லாபம் ஈட்டுவதற்காக சூப்பர் மார்க்கெட்டுகள், எரிசக்தி வழங்குநர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் அதிக செலவுகளை மக்களுக்கு...

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகளை கண்டறிந்துள்ளனர். அதன்படி, பெரும் லாபம் ஈட்டுவதற்காக சூப்பர் மார்க்கெட்டுகள், எரிசக்தி வழங்குநர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் அதிக செலவுகளை மக்களுக்கு...

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு – IPL 2024

IPL தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின்...