Newsஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணிலுக்கு அழுத்தம்

ஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணிலுக்கு அழுத்தம்

-

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறந்த பொருளாதார நிபுணருமான ஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு பதில் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசுவாசமான அமைச்சர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக் களத்தில் இளைய சமூகத்தின் ஈர்ப்பு ஹர்ஷ டி சில்வாவிடம் இருப்பதாகவும் நடுத்தர வர்க்க சமூகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு ரணில் நல்ல பதிலை அளித்துள்ளதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்திருந்ததாக உறுதிப்படுத்தப்படாத வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டி வழுகாராமவில் இன்று வெள்ளிக்கிழமை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதில் அரச தலைவராக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகியதன் பின்னர் பிரதமருக்கான அரசியலமைப்பு விதிகளின்படி பதில் அரச தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள இரகசிய வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளால் புதிய அரச தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...