Newsகனடாவில் 6 இலங்கையர்களைக் கொன்ற இலங்கை மாணவர்!

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொன்ற இலங்கை மாணவர்!

-

கனடாவின் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் வைத்து இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் குடும்பத்தின் தாய் மற்றும் பிள்ளைகள் அடங்குவதாகவும் தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி பிபிசி உலகச் சேவை, இறந்தவர்கள் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளது.

உயிரிழந்த 6 பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும், உயிரிழந்த இளைய குழந்தைக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குடும்பத்துடன் வசித்து வந்த 19 வயதுடைய இலங்கை மாணவன் ஒருவரே கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்க மற்றும் அவரது நான்கு பிள்ளைகளான 7 வயதான இனுகா விக்ரமசிங்க, 4 வயதான அஷ்வினி விக்ரமசிங்க, 2 வயதான ரின்யான விக்கிரமசிங்க மற்றும் இரண்டு மாத குழந்தை கெல்லி விக்ரமசிங்க ஆகியோர் அடங்குவர்.

உயிரிழந்த ஆறாவது நபர் 40 வயதான காமினி அமரகோன் என்பதுடன், அவர் அதே வீட்டில் வசித்த குடும்பத்தின் உறவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என அடையாளம் காணப்பட்ட பொலிசார், அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் ஒட்டாவாவின் சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய கொலையாகும், இது ஒரு உண்மையான சோகம், இது கனடாவின் தலைநகரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஒட்டாவாவின் மேயர் கூறினார்.

நகரத்தின் வரலாற்றில் நடந்த வன்முறைச் செயல்களில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு கொலை என்று அவர் விவரித்தார்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...