Newsஇலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

-

அனைத்து மாவட்ட செயலகங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும்,குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்களை அமைப்பதற்கு தற்போது மாவட்ட செயலகங்களில் இடம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்திற்கமைய,ஏற்கனவே மாவட்ட செயலகங்களில் இருந்து கடவுச்சீட்டை இணையத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர, தெரிவு செய்யப்பட்ட சில பிரதேச செயலகங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்களை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை பிரதான காரியாலயத்தின் நெரிசலைக் குறைப்பதே இந்த உப அலுவலகங்களை நிறுவுவதன் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் – பலர் படுகாயம்

சீனாவின் Zhenxiong மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்து நபர் ஒருவரின் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்புடைய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் உட்பட 23...

ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த அமெரிக்கப் பெண்

அமெரிக்காவில் பெண்ணொருவர் அரிதான ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பெற்றெடுத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸாசை சேர்ந்த தம்பதி ஜோனதன் (37), மெர்சிடிஸ் சந்து (34). இவர்களுக்கு...

உக்ரைன்-ரஷ்யா போர் முனைக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் – அம்பலமானது மோசடி

உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் போர் முனைகளுக்கு இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை அனுப்பும் மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள...

பால்டிமோர் பாலத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு சடலம்

அமெரிக்காவின் பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்ட உடல் மார்ச் 26 அன்று பால்டிமோர்...

ஸ்மார்ட்போன்அடிமைத்தனத்தின்படி நாடுகளின் தரவரிசையில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா

ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தின்படி நாடுகளின் தரவரிசையை உள்ளடக்கிய சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்மார்ட்போன்களுக்கு அதிகம் அடிமையான நாடுகளில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 36.8 சதவீதமாக...

NSW இல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கத்திகளை விற்க தடை

நியூ சவுத் வேல்ஸில் கத்திகளை விற்பனை செய்வதற்கான வயது வரம்பை நிர்ணயிக்கும் புதிய சட்டத்திற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கத்திக்குத்து...