Breaking News2008க்கு பிறகு பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் புகையிலை பொருட்களை வாங்க முடியாது

2008க்கு பிறகு பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் புகையிலை பொருட்களை வாங்க முடியாது

-

2008 க்குப் பிறகு பிறந்த அனைத்து பிரித்தானியர்களும் தங்கள் வாழ்நாளில் சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை வாங்க தடை விதிக்கப்படும்.

புகையிலைக்கான அணுகலைக் குறைக்கும் மற்றும் சிகரெட்டில் உள்ள நிகோடின் அளவைக் கட்டுப்படுத்தும் உலக முன்னணி சுகாதார சீர்திருத்தத்தை பிரிட்டனில் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.

உலகிலேயே அதிக புகையிலைக்கு எதிரான சட்டங்களைக் கொண்ட நாடாக இங்கிலாந்து மாறியுள்ளது.

இந்த சட்டமூலம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விவாதத்திற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தற்போது 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிகரெட் அல்லது இ-சிகரெட் சட்டவிரோதமானது என்றாலும், ஐந்தில் ஒரு குழந்தை இ-சிகரெட்டைப் பயன்படுத்த முயற்சித்துள்ளது, மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் இ-சிகரெட்டைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை வாங்குவதற்கான வயது வரம்பை ஆண்டுதோறும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் சிறார்களுக்கு இ-சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, நியூசிலாந்து 2008 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை வாங்குவதற்கு தடை விதித்தது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...