Breaking Newsபிரதமரின் அலுவலகத்தில் ஆவணங்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

பிரதமரின் அலுவலகத்தில் ஆவணங்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

-

அனைத்துலக நாணய பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பான ஆவணங்களை சிறிலங்கா பிரதமரின் அலுவலகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பான பல ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னர் பிரதமராகவும் தற்போது பதில் அரச தலைவராகவும் உள்ள ரணில் விக்கிரமசிங்க அனைத்துலக நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்திய போதிலும் அவர்கள் அனைவரின் பதிவுகளையும் பிரதமர் செயலகம் வைத்திருந்தது.

ஆனால், போராட்டக்காரர்கள் அலுவலகத்தை கைப்பற்றிய பிறகு கோப்புக்கள் காணாமல் போனதாக பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கோப்புக்களில் சிறிலங்காவுக்கு தேவையான உதவிகளை பெறுவது தொடர்பாக பல முக்கிய தகவல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...