Cinemaமீண்டும் ரஜினியுடன் இணையும் நடிகை ஷோபனா

மீண்டும் ரஜினியுடன் இணையும் நடிகை ஷோபனா

-

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்தை தயாரித்த ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் ‘First Look’ போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

ரஜினிகாந்த் தற்போது ஞானவேலின் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகின்ற நிலையில் இப்படம் ஒக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் மாதம் முதல் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171 படப்பிடிப்பில் இணையவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கின்றார். கடந்த ஆறு மாத காலமாக இப்படத்தின் வேலைகளில் இருந்த லோகேஷ் தற்போது நடிகர்களின் தேர்வை தொடங்கியுள்ளார். அதன்படி இப்படத்தில் நடிக்க பிரபல நடன மாஸ்டர் சாண்டி முதல் ஆளாக கமிட்டாகியுள்ளார்.

இவர் ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் மிரட்டலான வில்லன் ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருகின்றதாம். அந்த வகையில் பிரபல நடிகையான ஷோபனாவை இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்க லோகேஷ் முடிவெடுத்துள்ளாராம்.

தற்போது ஷோபனாவிடம் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். ஷோபனாவிற்கும் கதை மிகவும் பிடித்திருப்பதால் கண்டிப்பாக அவர் தான் தலைவர் 171 திரைப்படத்தில் நாயகியாக நடிப்பார் என கூறப்படுகின்றது. இவர் ஏற்கனவே ரஜினியுடன் தளபதி படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

அதன் பிறகு 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக தலைவர் 171 படத்தின் மூலம் ஷோபனா நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...