Sportsபஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் - IPL 2024

பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் – IPL 2024

-

IPL கிரிக்கெட் தொடரில் முல்லன்பூரில் நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அதர்வ தைடே மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதர்வா தைடே 18 ஓட்டங்களிலும், அடுத்து வந்த ப்ரப்சிம்ரன் சிங் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து பேர்ஸ்டோவுடன் அணி தலைவர் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். இதில் பேர்ஸ்டோ 15 ஓட்டங்களிலும், சாம் கர்ரன் 6 ஓட்டங்களிலும், அடுத்து களம் இறங்கிய ஷஷாங் சிங் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜித்தேஷ் சர்மா மற்றும் லிவிங்ஸ்டன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதில் ஜித்தேஷ் சர்மா 29 ஓட்டங்களில் ஆட்டமிழக்க. இதையடுயடுத்து ப்ரப்சிம்ரன் சிங்கிற்கு பதிலாக இம்பேக்ட் வீரராக அசுதோஷ் சர்மா களம் புகுந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக அசுதோஷ் சர்மா 31 ஓட்டங்களும், ஜித்தேஷ் சர்மா 29 ஓட்டங்களும் எடுத்தனர்.

ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , தனுஷ் கோட்யான் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக விளையாடினர். தொடக்க விக்கெட்டுக்கு 56 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் தனுஷ் கோட்யான் 24 ஓட்டங்களில் வெளியேறினார்.

தொடர்ந்து ஜெய்ஸ்வால் 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 18 ஓட்டங்களும் , ரியான் பராக் 18 பந்துகளில் 23 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது . பஞ்சாப் அணியின் அர்ஷிதீப் சிங் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஹெட்மயர் 2 சிக்சர்கள் பறக்க விட்டார். இதனால் ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 152 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெட்மயர் 10 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்தார்.

Latest news

அடுத்த மாதம் முதல் மொபைல் போன் பயன்படுத்தினால் ஓட்டுநர்களுக்கு அபராதம்

அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவின் சாலைச் சட்டங்களில் பல பெரிய மாற்றங்கள் நடைபெற உள்ளன. நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள AI கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் மொபைல்...

ஜப்பானில் ட்விட்டர் கொலையாளிக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை

ஜப்பான் 2017 ஆம் ஆண்டில் ஒன்பது பேரைக் கொன்ற ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. 2022 க்குப் பிறகு அந்த நாடு மரண தண்டனையை அமுல்படுத்தியதில்...

உறைந்த தவளைகள் உட்பட 62,000 கிலோ உணவை ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண்

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக 62,000 கிலோகிராம் வெளிநாட்டு உணவைக் கொண்டு வந்ததற்காக ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலியாக பெயரிடப்பட்ட polystyrene பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த அந்த உணவை ஆஸ்திரேலிய...

சர்வதேச மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் வேலைகளைக் குறைக்க உள்ள பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பிராந்திய பல்கலைக்கழகங்களில் ஒன்று, அதன் பட்ஜெட்டில் இருந்து $35 மில்லியன் சேமிக்க முயற்சிப்பதால், ஊழியர்களின் வேலைகள் குறைக்கப்படும் என்று கூறியுள்ளது. சர்வதேச மாணவர் வேலைவாய்ப்புகளில்...

உறைந்த தவளைகள் உட்பட 62,000 கிலோ உணவை ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண்

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக 62,000 கிலோகிராம் வெளிநாட்டு உணவைக் கொண்டு வந்ததற்காக ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலியாக பெயரிடப்பட்ட polystyrene பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த அந்த உணவை ஆஸ்திரேலிய...

சர்வதேச மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் வேலைகளைக் குறைக்க உள்ள பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பிராந்திய பல்கலைக்கழகங்களில் ஒன்று, அதன் பட்ஜெட்டில் இருந்து $35 மில்லியன் சேமிக்க முயற்சிப்பதால், ஊழியர்களின் வேலைகள் குறைக்கப்படும் என்று கூறியுள்ளது. சர்வதேச மாணவர் வேலைவாய்ப்புகளில்...