Sports3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி - IPL 2024

3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான சாம் கரண் – பிரப்சிம்ரன் சிங் ஒரளவு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் ஆட்டமிழந்த பின் அணியின் நிலைமை தலைகீழானது. குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சில் சிக்கி பஞ்சாப் வீரர்கள் விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். அதிலும் குறிப்பாக குஜராத அணி வீரர் சாய் கிஷோர் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடைசி கட்டத்தில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ஹர்பிரித் பாட்டியா ஆகியோர் அதிரடியாக விளையாடிம் அணியை சிறந்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவினார். இதில் பிரார் 12 பந்துகளில் 29 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் 20 ஓவர்களில் 142 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி பந்தில் பாட்டியா ஆட்டமிழந்தார். அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 35 ஓட்டங்களை அடித்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 143 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் விருதிமான் சகா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் சகா 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து நிதானமாக ஆடிய சுப்மன் கில் 35 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் 4 ஓட்டங்களும், ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய சாய் சுதர்ஷன் 31 ஓட்டங்களும், ஓமர்சாய் 13 ஓட்டங்களும், ஷாரூக்கான் 8 ஓட்டங்களும், ரஷித் கான் 3 ஓட்டங்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

முடிவில் தேவாட்டியா 36 (18) ஓட்டங்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் குஜராத் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளும், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

நன்றி தமிழன்

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...