Newsபுதிய ஜனாதிபதி விடுத்த அழைப்பு!

புதிய ஜனாதிபதி விடுத்த அழைப்பு!

-

இலங்கையில் நிலவரத்தைப் புரிந்துக் கொண்டு, இனியும் பிரிந்து செயற்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண முன்வரவேண்டும் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எனவே, என்னுடன் இணைந்து போட்டியிட்ட டளஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நான் இணைந்து பணியாற்ற வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன்.

அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கிறேன். நாம் பிரிந்து செயற்பட்ட காலம் இத்தோடு முடிவுற்றுவிட்டது.நாம் இனிமேல் ஒன்றாக பயணிக்க வேண்டும்.

நாளை முதல் அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்த நாம் தயாராகவே உள்ளோம் என ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றில் அவர் ஆற்றிய விசேட உரையின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Latest news

இந்தியாவுடன் வலுவான வர்த்தக ஒப்பந்தம் செய்வோம் என கூறிய அவுஸ்திரேலிய அமைச்சர்கள்

அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த வரிகள் குறித்து அவுஸ்திரேலிய வர்த்தக மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக வர்த்தக அமைச்சர் Don Farell, இந்தியாவுடன் வலுவான...

ஆஸ்திரேலிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் டிரம்ப் கொடுக்கும் அழுத்தம்

ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் மீது தொழில்நுட்ப வரிகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது அமெரிக்க...

ஆஸ்திரேலியாவில் கட்டாயத் திருமணம் நிறுத்தப்பட வேண்டும்!

கட்டாயத் திருமணங்கள் குறித்த அறிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை மற்றும் சமூக அமைப்புகளின் அறிக்கைகள் இதை நிரூபிக்கின்றன. பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே திருமணம்...

16 வயது சிறுவனின் மரணத்திற்கு காரணமான ChatGPT

16 வயது சிறுவனின் மரணத்திற்கு ChatGPT காரணமாக இருந்ததாகக் கூறி, OpenAI மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் OpenAI மற்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி...

நாளை முதல் விக்டோரியா மற்றும் NSW-க்கு வரும் பதின்ம வயதினருக்கான Uber

ஆஸ்திரேலியா முழுவதும் இளைஞர்களுக்காக Uber ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. "Uber for Teens" என்று அழைக்கப்படும் இந்தப் போக்குவரத்து சேவை நாளை முதல் செயல்படும். இந்த சேவை...

தென் சீனக் கடலில் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய போர்க்கப்பல்

தென் சீனக் கடலில் நடைபெறும் கடற்படைப் பயிற்சியில் ஆஸ்திரேலிய போர்க்கப்பல் ஒன்று இணைந்துள்ளது. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை வான் அச்சுறுத்தல்களுக்கு எதிரான கூட்டுப் பயிற்சிகளுக்காக...