Newsபட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் - பலர் படுகாயம்

பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் – பலர் படுகாயம்

-

சீனாவின் Zhenxiong மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்து நபர் ஒருவரின் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் உட்பட 23 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் Yunnan மாகாணத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.

முதலில் 10 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்றே கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர், இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 23 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பலரது நிலை கவலைக்கிடம் என்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் நூலிழையில் தப்பிய ஒருவர் தெரிவிக்கையில், காயம்பட்டவர்களில் சிலர் மருத்துவர்கள் என்றே குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தாக்குதல்தாரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வெளியான காணொளிகளில், தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், பலர் பலத்த காயங்களுடன் சுருண்டுவிழுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...