Sydneyசிட்னியில் அலையில் சிக்கி உயிரிழந்த இரு பெண்கள்

சிட்னியில் அலையில் சிக்கி உயிரிழந்த இரு பெண்கள்

-

சிட்னி சதர்லேண்ட்ஷயர் கடற்கரையில் உள்ள கர்னெல் என்ற இடத்தில் இரண்டு இளம் பெண்கள் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் பாறையில் இருந்த பெண்கள் குழு பலத்த அலைகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒரு பெண் விபத்தில் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 4.30 மணியளவில் கர்னெல் கடற்கரையில் பெண்கள் குழுவொன்று விபத்துக்குள்ளானதாக அவசர சேவை பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அவர்கள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

நீரில் மூழ்கிய பெண்களை பாதுகாப்பு படையினர் மீட்டு வைத்தியர்கள் சிகிச்சை அளித்த போதிலும் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மேலும் அவர் பாறைகளில் மோதி முதுகுத்தண்டில் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பகுதி மீனவர்கள் அதிகம் விரும்பிச் செல்லும் பகுதியாக இருந்தாலும், இந்தப் பெண்கள் மீன் பிடித்ததாக எந்தத் தகவலும் இல்லை என போலீஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இரண்டு பெண்களும் 20 வயதுடைய நேபாள நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த மாதமும் இதே கடற்கரையில் இரண்டு மீனவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், இந்த மரணத்தில் சந்தேகத்திற்குரிய எதுவும் அடையாளம் காணப்படவில்லை.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...