Sydneyசிட்னியில் அலையில் சிக்கி உயிரிழந்த இரு பெண்கள்

சிட்னியில் அலையில் சிக்கி உயிரிழந்த இரு பெண்கள்

-

சிட்னி சதர்லேண்ட்ஷயர் கடற்கரையில் உள்ள கர்னெல் என்ற இடத்தில் இரண்டு இளம் பெண்கள் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் பாறையில் இருந்த பெண்கள் குழு பலத்த அலைகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒரு பெண் விபத்தில் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 4.30 மணியளவில் கர்னெல் கடற்கரையில் பெண்கள் குழுவொன்று விபத்துக்குள்ளானதாக அவசர சேவை பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அவர்கள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

நீரில் மூழ்கிய பெண்களை பாதுகாப்பு படையினர் மீட்டு வைத்தியர்கள் சிகிச்சை அளித்த போதிலும் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மேலும் அவர் பாறைகளில் மோதி முதுகுத்தண்டில் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பகுதி மீனவர்கள் அதிகம் விரும்பிச் செல்லும் பகுதியாக இருந்தாலும், இந்தப் பெண்கள் மீன் பிடித்ததாக எந்தத் தகவலும் இல்லை என போலீஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இரண்டு பெண்களும் 20 வயதுடைய நேபாள நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த மாதமும் இதே கடற்கரையில் இரண்டு மீனவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், இந்த மரணத்தில் சந்தேகத்திற்குரிய எதுவும் அடையாளம் காணப்படவில்லை.

Latest news

இட்லி தொண்டையில் சிக்கியதில் பறிபோனது ஒருவரின் உயிர்!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாலக்காட்டில் நடத்தப்பட்ட உணவு உண்ணும் போட்டியின் போது, லொறி டிரைவர் ஒருவர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக...

‘யாகி’ சூறாவளியால் மியன்மாரில் 100இற்கும் அதிகமானோர் பலி!

'யாகி' சூறாவளி காரணமாக 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 'யாகி' சூறாவளி சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் வழியாக மியான்மரை தாக்கியுள்ளதாகவும் மியான்மாரில்...

மூத்த மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் ஒரு பள்ளி

மூத்த மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருந்தே படிக்க அனுமதிக்கும் அட்டவணையை நிரந்தரமாக நடைமுறைப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பள்ளி ஒன்று நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு...

WA சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் e-scooter ஓட்டுபவர்களுக்கும் புதிய ஆடைகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கு உயர்-தெரிவுத்திறன் உடைய ஆடைகளை கட்டாயமாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயணிகளின் பாதுகாப்பை...

மூத்த மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் ஒரு பள்ளி

மூத்த மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருந்தே படிக்க அனுமதிக்கும் அட்டவணையை நிரந்தரமாக நடைமுறைப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பள்ளி ஒன்று நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு...

WA சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் e-scooter ஓட்டுபவர்களுக்கும் புதிய ஆடைகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கு உயர்-தெரிவுத்திறன் உடைய ஆடைகளை கட்டாயமாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயணிகளின் பாதுகாப்பை...