Sydneyசிட்னியில் அலையில் சிக்கி உயிரிழந்த இரு பெண்கள்

சிட்னியில் அலையில் சிக்கி உயிரிழந்த இரு பெண்கள்

-

சிட்னி சதர்லேண்ட்ஷயர் கடற்கரையில் உள்ள கர்னெல் என்ற இடத்தில் இரண்டு இளம் பெண்கள் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் பாறையில் இருந்த பெண்கள் குழு பலத்த அலைகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒரு பெண் விபத்தில் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 4.30 மணியளவில் கர்னெல் கடற்கரையில் பெண்கள் குழுவொன்று விபத்துக்குள்ளானதாக அவசர சேவை பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அவர்கள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

நீரில் மூழ்கிய பெண்களை பாதுகாப்பு படையினர் மீட்டு வைத்தியர்கள் சிகிச்சை அளித்த போதிலும் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மேலும் அவர் பாறைகளில் மோதி முதுகுத்தண்டில் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பகுதி மீனவர்கள் அதிகம் விரும்பிச் செல்லும் பகுதியாக இருந்தாலும், இந்தப் பெண்கள் மீன் பிடித்ததாக எந்தத் தகவலும் இல்லை என போலீஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இரண்டு பெண்களும் 20 வயதுடைய நேபாள நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த மாதமும் இதே கடற்கரையில் இரண்டு மீனவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், இந்த மரணத்தில் சந்தேகத்திற்குரிய எதுவும் அடையாளம் காணப்படவில்லை.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...