Newsஇலங்கையில் மக்களின் ஆணை இரத்தானதால் உடனடியாக தேர்தலை நடத்துமாறு அழுத்தம்!

இலங்கையில் மக்களின் ஆணை இரத்தானதால் உடனடியாக தேர்தலை நடத்துமாறு அழுத்தம்!

-

அரச தலைவர் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் மக்கள் வழங்கிய ஆணை இரத்தாகி விட்டது என்றும் உடனடியாக தேர்தலை நடத்துமாறும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த அரச தலைவர் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மக்கள் வழங்கிய ஆணை தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பொதுத் தேர்தலை நடத்தி புதிய தேர்தலுக்கு வழி வகை செய்ய வேண்டும்.

ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான செலவை ஏற்க நிறுவனங்கள் இருக்கின்றன. அதற்கு ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை உதாரணமாகச் சுட்டிக்காட்ட முடியும்.

எந்தவொரு கொடுப்பனவும் பெறாமல் தேர்தல் கடமைகளில் ஈடுபடத் தயார் என அரச அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது பெரிய பிரச்சினையாக இருக்காது என்றார் அவர்.

Latest news

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொற்றுகள் ஏற்படும் அபாயம்

இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஐந்து பெரியவர்களில் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்குள் தொற்று ஏற்படும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மிச்சிகன் மருத்துவப் பல்கலைக்கழகம்...

உலகை விமானத்தில் சுற்றி வந்த இளைய ஆஸ்திரேலிய மனிதர்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு இளம் விமானி, உலகம் முழுவதும் விமானத்தில் பறந்த இளைய நபராக மாறத் தயாராகி வருகிறார். பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயது Byron Waller...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் ஆம்புலன்ஸ்கள் தொடர்பில் அழுந்துள்ள பிரச்சனை

தெற்கு ஆஸ்திரேலியாவில் ஆம்புலன்ஸ் நெரிசல் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தெற்கு ஆஸ்திரேலியா ஜூலை மாதத்தில் 5,866 Ambulance Ramping மணிநேரங்களைப் பதிவு செய்துள்ளது....

முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட Microbat இனங்கள்

நியூ சவுத் வேல்ஸின் Illawarra தாழ்நில காடுகளில் முதன்முறையாக ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளான நுண்ணுயிரி வௌவால் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு நியூ சவுத் வேல்ஸில் உள்ள...

விக்டோரியர்களுக்கு ஒரு சுய பாதுகாப்பு சட்டம்!

விக்டோரியாவின் தற்காப்புச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர Libertarian MP ஒருவர் அழைப்பு விடுக்கிறார். மாநிலம் முழுவதும் வன்முறை வீடு படையெடுப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இது வருகிறது. விக்டோரியா...

 இப்போது கடைகளில் கிடைக்கும் மனித உருவ ரோபோக்கள்

பெய்ஜிங்கில் ஒரு புதிய ரோபோ கடை திறக்கப்பட்டுள்ளது. அதில் இயந்திர சமையல்காரர்கள் முதல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் உயிருள்ள பிரதிகள் வரை அனைத்தும் விற்கப்படுகின்றன. சீன தலைநகரில் வெள்ளிக்கிழமை...