Newsஆஸ்திரேலியாவில் கடும் நெருக்கடி நிலை - சம்பள உயர்வை எதிர்பார்க்கும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் கடும் நெருக்கடி நிலை – சம்பள உயர்வை எதிர்பார்க்கும் மக்கள்

-

ஆஸ்திரேலியாவில் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பள விகிதங்கள் அதிகரிக்கப்படவில்லை என பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் 32 வருடங்களின் பின்னர் அதிகூடிய பணவீக்கமாக 6.1 வீதம் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் நேற்று அறிவித்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் பொருட்களின் விலைகளும் 6.1 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதியில் சம்பளம் 3.4 வீதத்தால் மட்டுமே அதிகரித்துள்ளது.

தேசிய குறைந்தபட்ச ஊதியம் சில வாரங்களுக்கு முன்னர் அதிகரிக்கப்பட்ட போதிலும், அது வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை என்பதே பலரது நிலைப்பாடாக இருந்து வருகிறது.

குறிப்பாக எரிபொருளின் விலை அதிகரிக்கும் போது பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் அதே வேளையில் இந்த நிலைமை மேலும் மோசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Latest news

குயின்ஸ்லாந்தில் வசிப்பவர்களுக்கு மின்சார கட்டணத்தில் இருந்து பெரும் நிவாரணம்

குயின்ஸ்லாந்தில் உள்ளவர்கள் புதிய திட்டத்தின் கீழ் தங்கள் ஆற்றல் கட்டணத்தில் $1000 தள்ளுபடி பெற உள்ளனர். குயின்ஸ்லாந்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மாநில அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விரிவான...

தெற்கு ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறை குற்றவாளிகளுக்கான புதிய சட்டங்கள்

தெற்கு ஆஸ்திரேலியா குடும்ப வன்முறை குற்றவாளிகளுக்கு மீண்டும் கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களைத் தொடர்ந்து, குடும்ப வன்முறை குற்றவாளிகள் நாட்டின் சில கடுமையான...

நியூ சவுத் வேல்ஸில் சிறு குழந்தைகளிடையே அதிகரித்து வரும் நிமோனியா பாதிப்புகள்

நியூ சவுத் வேல்ஸில் சிறு குழந்தைகளிடையே நிமோனியா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம் நிமோனியா நோயுடன் அவசர சிகிச்சைப் பிரிவில்...

மெல்போர்னின் Clyde North-ஐ சுற்றியுள்ள மக்களுக்கு தொலைபேசிக் கோபுரம் பற்றிய வாக்குறுதி

பல வருடங்களாக மோசமான கையடக்கத் தொலைபேசி சமிக்ஞைகளால் அவதிப்பட்டு வரும் Melbourne Clyde North பகுதியைச் சூழவுள்ள மக்களுக்கு தொலைபேசிக் கோபுரத்தை நிறுவித் தருவதாக வாக்குறுதி...

கஞ்சா சாகுபடி மற்றும் உற்பத்தி பற்றி ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டம்

பல்லாரட் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவில் மருத்துவ கஞ்சா சாகுபடி மற்றும் உற்பத்தி குறித்த தேசிய கல்வி பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளது. ஒற்றைத் தலைவலி, புற்றுநோய் தொடர்பான அறிகுறிகள், கால்-கை வலிப்பு...

அவுஸ்திரேலியாவுக்கு வர விசா கிடைக்காமல் காத்திருப்போருக்கு ஒரு அறிவுரை

ஆன்லைன் விசா மோசடிகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு உள்துறை அமைச்சகம் தொடர் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு வர எதிர்பார்த்திருக்கும் புலம்பெயர்ந்தோர் மட்டுமின்றி அவுஸ்திரேலியர்களும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ...