Newsஎஜமானை துப்பாக்கியால் சுட்ட ரோபோ நாய்!

எஜமானை துப்பாக்கியால் சுட்ட ரோபோ நாய்!

-

ரோபோ நாய் ஒன்று சோதனை முயற்சியில் பிரபல யூடியூபர் டாரன் ஜாசனை நெருப்புத் துப்பாக்கியால் சுட்ட காட்சி இணையத்தளத்தில் வைரலாகி உள்ளது.

‘ஸ்பீடு’ என்று அறியப்படும் டாரன் ஜாசன், சமீபத்தில் ஒரு ரோபோ நாய்க்குட்டியை வாங்கி அதை நேரடியாக இணையத்தள காணொளியில் பரிசோதித்துப் பார்த்தார்.

முதலில் அவர் ரோபோ நாய்க்கு கை கொடுக்கும் போது நாயும் முன்னங்காலைத் தூக்கிக் கை கொடுத்தது. பின்னர் அவர் பின்னோக்கி பல்டி அடித்தபோது, நாயும் துள்ளிக் குதித்தது.

பிறகு ரோபோ நாயில் இணைக்கப்பட்டுள்ள துப்பாக்கி பொத்தானை அழுத்தி விட்டு, குரைக்கும்படி கட்டளையிட்டார். ஆனால் ரோபோ நாய் எதிர்பாராதவிதமாக, துப்பாக்கியை இயக்கி எஜமானரை எதிரியாக நினைத்துச் சுடத் தொடங்கியது.

துப்பாக்கியிலிருந்து நெருப்பு பிழம்பு வெளியேறி டாரன் ஜாசனை தாக்கியது. இதை எதிர்பாராத அவர் அருகிலிருந்த நீச்சல் குளத்தில் குதித்தார்.

அப்போதும் ரோபோ நாய் அவரை நோக்கித் தொடர்ந்தும் சுட்டதில் ஒருவழியாக அதன் பார்வையிலிருந்து தப்பி, பின்புறமாக வந்து அதன் துப்பாக்கி பொத்தானை நிறுத்தியபிறகுதான் ரோபோ நாய் சுடுவதை நிறுத்தியது.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் காயம் அடையாமல் தப்பினார்.

Latest news

20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் Centrelink சலுகைகள்

பல Centrelink சலுகைகளின் விகிதங்கள் 20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என்று Services Australia தெரிவித்துள்ளது. வயது ஓய்வூதியம், வேலை தேடுபவர், மாற்றுத்திறனாளி ஆதரவு ஓய்வூதியம்,...

நிதி நெருக்கடியில் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் 75 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. Airwallex என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வரிகள்/வர்த்தகப் போர்கள்/மற்றும்...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

ஆசிய நாட்டுடன் புதிய கூட்டணியை அறிவிக்கிறார் Penny Wong

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் Penny Wong கூறுகிறார். ஜப்பானிய வெளியுறவு...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது முதியவர் அதிரடி கைது

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது நபர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு 62 வயது முதியவர்...