Breaking Newsபிரித்தானியாவில் பொதுநலவாய விளையாட்டு - முதன்முறையாக கலந்து கொள்ளும் யாழ் வீரர்

பிரித்தானியாவில் பொதுநலவாய விளையாட்டு – முதன்முறையாக கலந்து கொள்ளும் யாழ் வீரர்

-

பிரித்தானியாவில் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகின்ற 22வது பொதுநலவாய விளையாட்டு விழாவில் யாழப்பாணத்தை சேர்ந்தவர் முதல் முறையாக கலந்து கொள்ளவுள்ளார்.

22வது பொதுநலவாய விளையாட்டு விழாவின், கூடைப்பந்தாட்ட (3×3) போட்டிக்கான இலங்கை ஆண்கள் அணியில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த யோகானந்தன் சிம்ரோன் இடம்பிடித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் பழைய மாணவரான இவர், பாடசாலை காலங்களில் யாழ் மாவட்டத்தின் நட்சத்திர வீரராக அறியப்பட்டவர்.

தொடர்ந்து 2018ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை தேசிய கூடைப்பந்து அணியின் இறுதி 15 பேர் கொண்ட குழாத்தில் சிம்ரோன் இடம்பெற்றுள்ளார்.

2018ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் மற்றும் மலேஷியாவில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் என்பவற்றில் சிம்ரோன் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்துள்ளார்.

இலங்கை கூடைப்பந்து அணியின் முன்கள வீரராக திகழும் யோகானந்தன் சிம்ரோன், பொதுநலவாய போட்டிகளில் யாழ்ப்பாணத்திலிருந்து கலந்துகொள்ளும் முதலாவது கூடைப்பந்தாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சிம்ரோனின் இந்த வெற்றி பயணத்திற்கு பங்காற்றிய பயிற்சியாளர் திரு ஜெயபாலன் ஜெசிந்தனுக்கும் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்திற்கும், யாழ்ப்பாண வீரனுக்கும், கூடைப்பந்தாட்ட அணி மற்றும் பொதுநலவாய போட்டிகளுக்கான 165 வீரர்களை கொண்ட குழாமுக்கும் மக்கள் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

Latest news

300 புதிய தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளார் மன்னர் சார்ல்ஸ்

பிரித்தானிய மன்னர் 3ம் சார்லஸ் புதிதாக 300 தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அரியணை ஏறிய பிரித்தானிய...

Al Jazeera அலுவலகத்தை மூடுமாறு இஸ்ரேல் உத்தரவு!

இஸ்ரேல் அதிகாரிகள் Al Jazeera அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை படையெடுத்தனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (Hamas) இடையே போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கத்தார் நாடு போர்...

கிணற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ள காணாமல் போன அவுஸ்திரேலிய சகோதரர்களின் சடலங்கள்

பல நாட்களாக காணாமல் போயிருந்த இரண்டு அவுஸ்திரேலிய சகோதரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணியின் சடலங்கள் குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. டிஎன்ஏ ஆதாரம் இல்லாமல்...

Qantas பயணிகளுக்கு $20 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும்

Qantas Airlines, சரிபார்க்கப்பட்ட விமானங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு $20 மில்லியன் பணத்தைத் அபராதமாக செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. கூடுதலாக, குவாண்டாஸ் விமானம் ரத்து அல்லது தாமதம் குறித்த சரியான...

Qantas பயணிகளுக்கு $20 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும்

Qantas Airlines, சரிபார்க்கப்பட்ட விமானங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு $20 மில்லியன் பணத்தைத் அபராதமாக செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. கூடுதலாக, குவாண்டாஸ் விமானம் ரத்து அல்லது தாமதம் குறித்த சரியான...

T20க்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி

T20 உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. வங்கதேசத்தில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள போட்டிக்கான போட்டி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இந்தியாவை...