News80 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களை அழைத்து செல்லவுள்ள Google

80 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களை அழைத்து செல்லவுள்ள Google

-

Google அதன் செயற்கைக்கோள் படத் தளமான Google Earth பற்றிய அற்புதமான புதுப்பிப்புகளுடன் பயனர்களை 1930ஆம் ஆண்டுக்கு அழைத்துச் செல்ல உள்ளது. இந்த மேம்பாடு, தனிநபர்களை 80 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று செயற்கைக்கோள் மற்றும் வான்வழி படங்களை பார்ப்பதற்கு உதவுகிறது.

மேலும் பல்வேறு இடங்களுக்கு இது காலவரிசையை (Timeline) கணிசமாக நீட்டிக்கும். தற்போது, ​​பயனர்கள் கடந்த சில தசாப்தங்களின் படங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. ஆனால் வரவிருக்கும் புதிய அம்சங்கள், 1930களில் லண்டன், பெர்லின், வார்சா மற்றும் பாரிஸ் போன்ற நகரங்கள் எப்படி இருந்தது என ஆராய அனுமதிக்கும். இது நேர வரம்பை திறம்பட இரட்டிப்பாக்குவதுடன், பயனர்களுக்கு “Time travel” மற்றும் இந்த நகர்ப்புற நிலப்பரப்புகளின் பரிணாமத்தை காண ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

கூகுள் அதன் அறிவிப்பில், 1938ல் உள்ள சென் பிரான்சிஸ்கோவிற்கும், 2024ல் அதன் தற்போதைய நிலைக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க ஒப்பீடுகளைக் காட்சிப்படுத்தியது.

இது பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க புவியியல் மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. உதாரணமாக, சான் ஃபிரான்சிஸ்கோ துறைமுகங்களின் வரலாற்று படம். அன்று போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட கப்பல், தற்போது உணவகங்கள் மற்றும் உல்லாசக் கப்பல்கள் என மாறியுள்ளது.

இந்த புதிய அம்சத்தை மொபைல் மற்றும் இணையம் மூலம் பெறலாம். மேலும், வரும் வாரங்களில் இதில் மேம்படுத்தப்பட்ட அம்சம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, google தனது வீதிக் காட்சி (Street View) அம்சத்தை கிட்டத்தட்ட 80 நாடுகளில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. அத்துடன், google earth மற்றும் google மேப்பில் பயனர்கள் மேம்பட்ட படத் தரத்தை எதிர்பார்க்கலாம். ஏனெனில் மேம்பட்ட AI மாதிரிகள் மூலம் காட்சிகளை கூர்மைப்படுத்தி தெளிவுபடுத்துவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

நன்றி தமிழன்

Latest news

உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நகரமாக அபுதாபி

உலக நாடுகளில், அரசு மேற்கொள்ளும் முதலீட்டு நிதிகளின் மூலம் பெறும் வருவாய் அடிப்படையில், உலகிலேயே பணக்கார நகரமாக அபு தாபி வாகை சூடியிருக்கிறது. பல்வேறு நாடுகளின் அரசுகள்...

“உயிருள்ள எதையும் TV-யில் காட்டக் கூடாது“ – தாலிபான் அதிரடி உத்தரவு

2021 ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான் ஆட்சியில் இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தின் பெயரால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது....

காதலிக்கு $4.3 மில்லியன் வீட்டை வாங்கிய பிரதமர் மீது குற்றச்சாட்டு

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனது காதலிக்காக 4.3 மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள வீட்டை வாங்கியதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் அவுஸ்திரேலியர்கள்...

நாளை மற்றும் நாளை மறுநாள் குறித்து விக்டோரியா மக்களுக்கு ஒரு அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

நாளை மற்றும் நாளை மறுநாள் குறித்து விக்டோரியா மக்களுக்கு ஒரு அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

இந்தியா – கனடா தூதரக உறவில் விரிசல் – தூதுவர்கள் வெளியேற்றம்

கனடாவில் உள்ள இந்திய தூதுவர்கள் 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது. இதனால் கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான்...