Newsஜனாதிபதி ரணிலின் விசேட அறிவிப்பு

ஜனாதிபதி ரணிலின் விசேட அறிவிப்பு

-

சர்வகட்சி அரசாங்கத்திற்கான அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் பங்குபற்றிய அனைத்து கட்சிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (08) முன்மொழிவுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, போராட்டத்தின் உண்மையான மக்களின் எதிர்பார்ப்பை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான அம்சங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான பிரேரணை தொடர்பில் தென்னிலங்கையின் பிரதம சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட மக்கள் பேரவையில் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீளக் கொண்டுவருவது மற்றும் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில கட்சிகளுடன் மாத்திரமே இன்னும் கலந்துரையாடல்கள் உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொற்றுகள் ஏற்படும் அபாயம்

இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஐந்து பெரியவர்களில் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்குள் தொற்று ஏற்படும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மிச்சிகன் மருத்துவப் பல்கலைக்கழகம்...

உலகை விமானத்தில் சுற்றி வந்த இளைய ஆஸ்திரேலிய மனிதர்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு இளம் விமானி, உலகம் முழுவதும் விமானத்தில் பறந்த இளைய நபராக மாறத் தயாராகி வருகிறார். பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயது Byron Waller...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் ஆம்புலன்ஸ்கள் தொடர்பில் அழுந்துள்ள பிரச்சனை

தெற்கு ஆஸ்திரேலியாவில் ஆம்புலன்ஸ் நெரிசல் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தெற்கு ஆஸ்திரேலியா ஜூலை மாதத்தில் 5,866 Ambulance Ramping மணிநேரங்களைப் பதிவு செய்துள்ளது....

முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட Microbat இனங்கள்

நியூ சவுத் வேல்ஸின் Illawarra தாழ்நில காடுகளில் முதன்முறையாக ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளான நுண்ணுயிரி வௌவால் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு நியூ சவுத் வேல்ஸில் உள்ள...

விக்டோரியர்களுக்கு ஒரு சுய பாதுகாப்பு சட்டம்!

விக்டோரியாவின் தற்காப்புச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர Libertarian MP ஒருவர் அழைப்பு விடுக்கிறார். மாநிலம் முழுவதும் வன்முறை வீடு படையெடுப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இது வருகிறது. விக்டோரியா...

 இப்போது கடைகளில் கிடைக்கும் மனித உருவ ரோபோக்கள்

பெய்ஜிங்கில் ஒரு புதிய ரோபோ கடை திறக்கப்பட்டுள்ளது. அதில் இயந்திர சமையல்காரர்கள் முதல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் உயிருள்ள பிரதிகள் வரை அனைத்தும் விற்கப்படுகின்றன. சீன தலைநகரில் வெள்ளிக்கிழமை...