Sportsவீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பயிற்சியாளர்

வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பயிற்சியாளர்

-

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பெயரில் ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் பயிற்சியாளர் ஒருவரை அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் ஆணையம் கட்டாய விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

பையத்லட்டுகள் பலர் அளித்த குற்றச்சாட்டை விசாரிக்க, அமெரிக்க பையத்லான் உறுப்பினர்களுக்கு அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் ஆணையம் மின்னஞ்சல் அனுப்பியது. மின்னஞ்சல் செய்தியில், பயிற்சியாளர் ஒருவர் கட்டாய விடுமுறையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், புகார் அளித்த வீரர்களின் துணிச்சல் பாராட்டுதலுக்குரியது என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், பயிற்சியாளரின் பெயர் விவரங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. விசாரணை நடக்கும்போது கூடுதல் விhரங்கள் எதுவும் வெளியிடப்பட மாட்டாது என்று அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் ஆணையம் (யு.எஸ்.ஓ.பி.சி) செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த நிலையில், பயிற்சியாளர் கேரி கோலியண்டர் மீது வில் வீராங்கனை கிரேஸ் பௌடோட் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். தனது 15ஆவது வயதில் இருந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாக கேரி மீது கிரேஸ் குற்றம் சாட்டியுள்ளார். கிரேஸ், தனது 18 ஆவது வயதில் பாலியல் துன்புறுத்தலை

எதிர்த்தபோதும், அவருக்கு கேரி மிரட்டல் விடுத்துள்ளார். தனது பையத்லான் கனவு பாழாகி விடும் என்ற அச்சத்துடனேயே கிரேஸ் இருந்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கிரேஸ் மிகுந்த மனச்சோர்வில் இருப்பதை அறிந்த வைத்தியர், கிரேஸுக்கு பயிற்சி அளிப்பதை நிறுத்துமாறு கேரியிடம் கூறியுள்ளார். இருப்பினும், மிகுந்த மனஉளைச்சலில் இருந்த கிரேஸ், 2010ஆம் ஆண்டு, ஒக்டோபரில் அதிகளவிலான மாத்திரைகளை உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருப்பினும், அங்கிருந்த சக விளையாட்டு வீரரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கிரேஸ் காப்பாற்றப்பட்டார்.

அடுத்த நாளிலேயே, கேரி தனது பதவியை இராஜிநாமா செய்தார். இருப்பினும், 2016ஆம் ஆண்டில், நோர்டிக் பனிச்சறுக்கு உயர் செயல்திறன் இணை இயக்குநராக அமெரிக்க பராலிம்பிக் அணியால் பணியமர்த்தப்பட்டார். பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக ஒலிம்பிக் வீரர் ஜோன் ரெய்ட் சில மாதங்களுக்கு முன்னர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, பல விளையாட்டு வீராங்கனைகளும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

Latest news

போலியான மருத்துவ விடுப்பு காரணமாக பில்லியன் கணக்கான டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியர்கள்

பத்து ஆஸ்திரேலியர்களில் ஏழு பேர் போலியான மருத்துவ விடுப்பு எடுக்கும் பழக்கத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, 68 சதவீத ஆஸ்திரேலியர்கள் போலியான மருத்துவ விடுப்பு...

2025 மன்னரின் பிறந்தநாள் கௌரவப் பட்டியலில் ஆஸ்திரேலியர்கள்

2025 ஆம் ஆண்டுக்கான மன்னரின் பிறந்தநாள் கௌரவப் பட்டியலில் முன்னாள் பிரதமர் Scott Morrison-இற்கு மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து தவிர,...

Mount Hotham பகுதியில் பல மணி நேரம் சிக்கிய 20 பேர் மீட்பு

விக்டோரியாவின் Mount Hotham-இல் மணிக்கணக்கில் கார்களுக்குள் சிக்கிக் கொண்ட ஒரு குழு மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். வார இறுதியில் Hotham Heights பகுதியில் 50 சென்டிமீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவு...

Centrelink-க்கு தவறாக விண்ணப்பித்ததால் $15,000 இழந்த ஆஸ்திரேலிய தாய்

Centrelink பெற்றோர் விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட ஒரு பொதுவான தவறு காரணமாக $15,000 இழந்த இரண்டு குழந்தைகளின் ஆஸ்திரேலிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை சமூக...

Mount Hotham பகுதியில் பல மணி நேரம் சிக்கிய 20 பேர் மீட்பு

விக்டோரியாவின் Mount Hotham-இல் மணிக்கணக்கில் கார்களுக்குள் சிக்கிக் கொண்ட ஒரு குழு மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். வார இறுதியில் Hotham Heights பகுதியில் 50 சென்டிமீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவு...

மரண அறிவித்தல் – திரு. தம்பு இந்திரசாமி

யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியா - கான்பராவை (Canberra) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு இந்திரசாமி அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி...