Newsமோசமாகிவரும் விக்டோரியா காட்டுத்தீ - கவனமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

மோசமாகிவரும் விக்டோரியா காட்டுத்தீ – கவனமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

-

தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக விக்டோரியா மாகாணத்தின் சில பகுதிகளில் பல அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

காட்டுத் தீ நிலைமை கட்டுக்கடங்காமல் பரவி வருவதோடு, இதுவரை 34000 ஹெக்டேயர் நாசமாகியுள்ளதுடன், இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் காட்டுத் தீ நிலைமை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காட்டுத் தீயை கட்டுப்படுத்த 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆபத்தான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, தற்போது Grampiand தேசிய பூங்கா பகுதியில் இருந்து வடக்கில் இருந்து Halls Gap நோக்கி காட்டுத் தீ நிலைமை நகர்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, Belfield, Belfield Settlement, Flat Rock Crossing, Fyans Creek, Gampians Junction மற்றும் Halls Gap உள்ளிட்ட பல பகுதிகளில் வசிப்பவர்களை அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும், ஏற்கனவே அந்த பகுதிகளை விட்டு வெளியேறிய குடியிருப்பாளர்களை அந்த பகுதிகளுக்கு திரும்ப வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Latest news

Buy Now Pay Later-இல் வரவிருக்கும் மிகப்பெரிய மாற்றம்

தீங்கு விளைவிக்கும் கடன் ஒப்பந்தங்களால் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் நோக்கமாகக் கொண்டிருப்பதால், Buy Now Pay Later வழங்குநர்களுக்கு பெரிய மாற்றங்கள் வரவுள்ளன. ஜூன்...

Qatar Airways-உடன் இணைந்து வானில் பறக்க்கும் Virgin Australia

Qatar Airways-உடனான கூட்டாண்மை மூலம் நீண்ட தூர சந்தையில் மீண்டும் நுழைவதன் மூலம் Virgin Australia சர்வதேச அரங்கிற்குத் திரும்பத் தயாராகி வருகிறது. ஜூன் 12, 2025...

குயின்ஸ்லாந்தில் பிரபலமடைந்துவரும் Osteoporosis தடுப்பு உடற்பயிற்சி

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பெரியவர்களிடையே எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் Osteoporosis-ஐ தடுப்பதை நோக்கமாகக் கொண்ட உடற்பயிற்சி வகுப்புகள் பிரபலமடைந்து வருகின்றன. ஆறு மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் குறைந்த எலும்பு...

குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக 4 நாட்களாக போராடும் பொதுமக்கள்

டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் இப்போது நான்காவது நாளாகத் தொடர்கின்றன. போராட்டக்காரர்களை அடக்க சுமார் 300 மத்திய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தைக்...

காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற Greta Thunberg கைது

காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான Madleen-இல் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் Greta Thunberg கூறியுள்ளார்....

G7 மாநாட்டின் போது அல்பானீஸ் மற்றும் டிரம்ப் இடையே சந்திப்பை அமைக்க அழுத்தம்

இந்த வாரம் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என்று  கூட்டணித் தலைவர்கள் கூறுகின்றனர். உலகத் தலைவர்கள் கனடாவில் நடைபெறும் G7...