Breaking Newsஸ்கொட் மோரிசனின் இரகசியங்கள் அம்பலம் - அதிர்ச்சியில் பிரதமர்

ஸ்கொட் மோரிசனின் இரகசியங்கள் அம்பலம் – அதிர்ச்சியில் பிரதமர்

-

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மோரிசன் (Scott Morrison) இரகசியமான முறையில் தன்னைப் பல அமைச்சர்நிலைப் பதவிகளுக்கு நியமனம் செய்துகொண்டமை தெரியவந்துள்ளது.

இது குறித்துத் தற்போதைய பிரதமர் ஆண்டனி ஆல்பனீசி (Anthony Albanese) அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஆண்டு மே மாதம் வரை, மோரிசன் கூடுதலாக 5 பதவிகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

COVID-19 நோய்ப்பரவல் உச்சத்தில் இருந்தபோது அவர் சுகாதார அமைச்சை வழிநடத்தியிருந்தார்.

அண்மையில் மோரிசன் தொழில்துறை, அறிவியல், எரிசக்தி, வளங்கள் ஆகியவற்றின் அமைச்சுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

அதன் தொடர்பில் அடுத்த திங்கட்கிழமை வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து ஆலோசனை பெறவிருப்பதாக ஆல்பனீசி கூறினார்.

அரசியல்வாதிகள் தங்களது செயல்களுக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆனால் எந்தச் சீர்திருத்தங்களையும் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலப் பிரதமர்கள் ஏற்கும் புதிய பதவிகளை வெளிப்படையாக அறிவிப்பதை உறுதிசெய்வதும் அவசியம் என ஆல்பனீசி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மோரிசன் தன்னைத் தற்காத்துப் பேசியிருக்கிறார். தனது பொறுப்புகளை அம்பலப்படுத்துவது அவசியமில்லை என்று கருதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஏற்படும் வானிலை மாற்றங்கள்

வரும் நாட்களில் அடிலெய்டு, சிட்னி, மெல்போர்ன் மற்றும் ஹோபார்ட் பகுதிகளுக்கு வெப்பமான வானிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அடிலெய்டைச் சுற்றியுள்ள வெப்பநிலை 30 டிகிரி...

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் மேலும் அதிகரிக்கும் நீரில் மூழ்கி இறக்கும் போக்கு

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் ஆஸ்திரேலியாவில் ஐந்தாவது நீரில் மூழ்கி மரணம் பதிவாகியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று அடித்துச்...

Werribee-இல் பிறந்த சிங்கக் குட்டிக்கு ஏற்பட்ட சோகம்

விக்டோரியாவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் பிறந்த சிங்கக் குட்டி இறந்ததாக கூறப்படுகிறது. 'பிரீசியஸ்' என்று பெயரிடப்பட்ட இந்த குட்டியின் இறப்புக்குக் காரணம், பெண் சிங்கம் எதிர்பாராத விதமாக...

வேட்டையாட சென்ற இடத்தில் விபரிதம் – தந்தையை சுட்ட மகன்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய டேபிள்லேண்ட்ஸில் வேட்டையாடச் சென்றிருந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 70 வயதான தந்தையும் 47 வயது மகனும் இன்று காலை வேட்டையாடிக் கொண்டிருந்ததாக...

ஆஸ்திரேலியாவில் நிதி மோசடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?

ஆஸ்திரேலியர்களில் 10 பேரில் ஒருவர் அட்டை மோசடியை அனுபவித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. கிரெடிட்...

மெல்பேர்ணில் காணாமல் போன குழந்தை

விக்டோரியாவில் உள்ள டான்டெனாங் மலைத்தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஒரு குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் மெல்போர்னில் உள்ள ஒலிண்டா பிளேஸ்பேஸில் விளையாடிக்...