Breaking Newsஸ்கொட் மோரிசனின் இரகசியங்கள் அம்பலம் - அதிர்ச்சியில் பிரதமர்

ஸ்கொட் மோரிசனின் இரகசியங்கள் அம்பலம் – அதிர்ச்சியில் பிரதமர்

-

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மோரிசன் (Scott Morrison) இரகசியமான முறையில் தன்னைப் பல அமைச்சர்நிலைப் பதவிகளுக்கு நியமனம் செய்துகொண்டமை தெரியவந்துள்ளது.

இது குறித்துத் தற்போதைய பிரதமர் ஆண்டனி ஆல்பனீசி (Anthony Albanese) அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஆண்டு மே மாதம் வரை, மோரிசன் கூடுதலாக 5 பதவிகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

COVID-19 நோய்ப்பரவல் உச்சத்தில் இருந்தபோது அவர் சுகாதார அமைச்சை வழிநடத்தியிருந்தார்.

அண்மையில் மோரிசன் தொழில்துறை, அறிவியல், எரிசக்தி, வளங்கள் ஆகியவற்றின் அமைச்சுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

அதன் தொடர்பில் அடுத்த திங்கட்கிழமை வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து ஆலோசனை பெறவிருப்பதாக ஆல்பனீசி கூறினார்.

அரசியல்வாதிகள் தங்களது செயல்களுக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆனால் எந்தச் சீர்திருத்தங்களையும் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலப் பிரதமர்கள் ஏற்கும் புதிய பதவிகளை வெளிப்படையாக அறிவிப்பதை உறுதிசெய்வதும் அவசியம் என ஆல்பனீசி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மோரிசன் தன்னைத் தற்காத்துப் பேசியிருக்கிறார். தனது பொறுப்புகளை அம்பலப்படுத்துவது அவசியமில்லை என்று கருதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

இலங்கையர் ஒருவரை தாக்கிய பிரித்தானிய பொலிஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரை குற்றவாளி என தவறாக நினைத்து தாக்கிய குற்றத்திற்காக இங்கிலாந்து பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் கொலை...

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர $925 மில்லியன்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான அவசர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, வன்கொடுமைத் திட்டத்தை நிறுவுவதற்கு $925 மில்லியன் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வன்முறைக்கு உள்ளாகும்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேச சிறப்பு அமைச்சரவை கூட்டம்

அவுஸ்திரேலியாவில் பெரிதும் பேசப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. வன்முறையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார் அரசர் சார்லஸ்

கடந்த பெப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அரசர் சார்லஸ் நேற்று (30) மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார். அது, ராணி கமிலாவுடன் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்குச்...