Newsஇலங்கையில் காதலியை கண்காணிக்க இளைஞனின் அதிர்ச்சி செயல்

இலங்கையில் காதலியை கண்காணிக்க இளைஞனின் அதிர்ச்சி செயல்

-

இலங்கையில் முஸ்​லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு சுற்றி திரிந்து கொண்டிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி ரயில் நிலையத்தில் இவ்வாறு அலைந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் பிடித்து, காலி பொலிஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காலி மக்ளுவவை வசிப்பிடமாகக் கொண்ட 27 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை ரயில் நிலையத்துக்கு வந்திருந்த அவ்விளைஞன், கொழும்புக்குச் செல்வதற்காக ரயில் பற்றுச்சீட்டை பெற்றுள்ளார்.

அவரது குரல் தொடர்பில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை பின்தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.

எனினும், முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையுடன் அலைந்து திரிபவர் ஆண்ணொருவர் என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் இனங்கண்டு கொண்டனர். அதன்பின்னர் அவரை பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

தன்னுடைய காதலி இன்னுமொருவருடன் தொடர்பில் இருக்கிறார் என கேள்விப்பட்டேன். அவ்விருவரும் காலி ரயில் நிலையத்துக்கு வருகின்றனர் என்றும் தகவல் கிடைத்தது. அதன்பின்னரே, இவ்வாறு முகத்தை மறைத்துக்கொண்டு, பெண்களின் உடையில் இங்கு வந்தேன் என தெரிவித்துள்ளார்.

அந்த அபாயா உடையானது, அவ்விளைஞனின் தாயுடையது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவ்விளைஞனை ரயில் பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ​மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

மாறி மாறி வரிகளை ஏற்றும் சீனா – அமெரிக்கா

அமெரிக்கா மீது விதிக்கப்பட்ட வரிகளை மேலும் அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளது. சீனாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த மிகப்பெரிய 145% வரிக்கு பதிலளிக்கும் விதமாக இது செய்யப்பட்டதாக...

சீனாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்று சேர்வதற்கான அறிகுறிகள்

உலகளாவிய வர்த்தகத்தை அதிகரிக்க ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராகி வருகிறது. சீன இறக்குமதிகள் மீதான வரிகளை டிரம்ப் 125% ஆக உயர்த்தியதை அடுத்து இந்த நடவடிக்கை...

விக்டோரியாவில் குறைந்துவரும் ஜெசிந்தா ஆலனின் செல்வாக்கு

விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலனின் செல்வாக்கு மாநிலத்தில் குறைந்துள்ளதாக ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. Redbridge நடத்திய கருத்துக் கணிப்பில், ஜெசிந்தா ஆலனின் நிகர திருப்தி மதிப்பீடு எதிர்மறை...

பண விகிதம் பற்றிய NAB வங்கியின் கருத்து

ஆஸ்திரேலிய ரொக்க விகிதத்தை 2.6 சதவீதமாகக் குறைப்பதாக NAB வங்கி கூறுகிறது. இது சராசரி அடமானங்களில் நூற்றுக்கணக்கான டாலர்களைக் குறைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அடுத்த ஜூலை மாதம்...

எதிர்காலத்தில் ஆஸ்திரேலிய அத்தியாவசிய சேவையின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

எதிர்காலத்தில் அடிப்படை அஞ்சல் கட்டணங்களை அதிகரிக்க ஆஸ்திரேலிய அஞ்சல் துறை எதிர்பார்க்கிறது. ஆஸ்திரேலிய தேசிய அஞ்சல் சேவையான Australia Post, அதன் பொது கடித சேவைகளுக்கான விலை...

2024 Customer Satisfaction Award வென்றவர்களின் பட்டியல் இதோ!

2024 ஆம் ஆண்டு Roy Morgan வருடாந்திர வாடிக்கையாளர் திருப்தி விருதுகளின் (Customer Satisfaction Award) பல வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஆஸ்திரேலியாவின் இந்த ஆண்டின் சிறந்த...