Newsஅடுத்த மாதம் பலாலியில் இருந்து ஏயார் இந்தியா வானூர்தி சேவை

அடுத்த மாதம் பலாலியில் இருந்து ஏயார் இந்தியா வானூர்தி சேவை

-

பலாலியில் உள்ள யாழ்ப்பாண அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கான வானூர்தி சேவையை எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் தொடக்க வாரத்திற்கு இரண்டு தடவை பலாலிக்கு வானூர்திகளை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் சிறிலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

75-90 ஆசனங்கள் உள்ள வானூர்தி என விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகள் வரும் பருவ காலமாக தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு வானூர்தி நிலையத்திற்கான அனைத்துலக வானூர்தி சேவைகள் ஜூலை 1 ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என்று சிறிலங்கா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஒக்ரோபர் 17, 2019 அன்று, சென்னையில் இருந்து அலையன்ஸ் ஏர் வானூர்தி பலாலி வானூர்தி நிலையத்தில் தரையிறங்கிய முதல் வணிக அனைத்துலக வானூர்தி என்பது குறிப்பிடத்தக்கது என்று கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Latest news

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ரோமானிய காலத்தைச் சேர்ந்த, தங்கத்தை விட அதிக மதிப்புள்ள ஊதா நிறப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் . இங்கிலாந்திலுள்ள Carlisle என்னுமிடத்தில் நடந்துவந்த...

6 நாட்களாக அமேசான் பொதிக்குள் சிக்கியிருந்த பூனை

அமெரிக்காவின் உடா மாநிலத்தில் அமேசான் நிறுவனத்தின் மூலம் இணையத்தில் பொருட்களை வாங்கிய தம்பதியர், சில பொருட்களை திருப்பி அனுப்ப பொதி செய்த போது பெட்டிக்குள் தங்கள்...

வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் – ஆஸ்திரேலிய ஆய்வில் தகவல்

உடல் பருமனை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிகவும் பொருத்தமான பழம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் வாழைப்பழம், வெண்ணெய், கீரை, தக்காளி மற்றும் கேரட் போன்றவற்றை அதிகம்...

10 சதவீதத்தால் குறைந்துள்ள iPhone விற்பனை

உலகின் மிகவும் பிரபலமான போன் மாடலான ஐபோன் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையை பாதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இது...

அவுஸ்திரேலியாவில் பணியாற்றிய இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை நாடு கடத்த முடிவு

அவுஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்த இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் இவர்கள் இரகசியமாக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உளவாளிகள் இருவர்...

ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள்

ஏப்ரல் மாத வாகன விற்பனை அறிக்கையின்படி, ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள் பெயரிடப்பட்டுள்ளன. பெடரல் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் 97,202...