Breaking Newsஆஸ்திரேலிய மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி - உணவு பொருட்களின் விலைகளில் மாற்றம்

ஆஸ்திரேலிய மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி – உணவு பொருட்களின் விலைகளில் மாற்றம்

-

ஆஸ்திரேலியாவில் பல்வேறு காரணங்களால், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் எதிர்வரும் நாட்களில் மீண்டும் உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிர்பார்ப்பு – விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் இதை பாதித்துள்ளது.

நாடு முழுவதும் உணவு பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தியில் சுமார் 170,000 வேலை வாய்ப்புகள் இருப்பதாக ஆஸ்திரேலிய தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு கூறுகிறது.

இந்த நிலைமைக்கு தீர்வு காணப்படாவிட்டால், அடுத்த 12-24 மாதங்களில் கடுமையான உணவுப் பற்றாக்குறை அல்லது விலைவாசி உயர்வை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதன்படி, பால் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சி போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் 30 முதல் 50 சதவீதம் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

இரண்டு ஆண்டுகளில் AfterPay-யில் $19,000 செலவிட்ட ஆஸ்திரேலியப் பெண்

ஆஸ்திரேலியாவில் ஒரு இளம் பெண் இரண்டு வருடங்களாக “AfterPay” மூலம் $19,000 செலவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு TikTok வீடியோவை வெளியிட்டு, தனது AfterPay பயன்பாடு கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும்,...

அல்பானீஸுடன் பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் இன்னும் தயாராகவில்லை

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுடனான G7 சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஜூன் 15 முதல் 17 வரை கனடாவில்...

வெளிநாட்டு சந்தையில் அதிகரித்துவரும் ஆஸ்திரேலிய செம்மறி ஆட்டிறைச்சியின் தேவை

மே மாதத்தில், வெளிநாட்டு தேவை அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியா 36,754 டன் செம்மறி ஆட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. வெளிநாடுகளிடமிருந்து தேவை அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலிய...

பாலி தீவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆஸ்திரேலியர் ஒருவர் உயிரிழப்பு

பாலியில் உள்ள ஒரு சுற்றுலா வில்லாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர். சனிக்கிழமை காலை துப்பாக்கிச்...

விக்டோரியாவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட H7N8 பறவைக் காய்ச்சல்

விக்டோரியா மாநிலத்தில் சமீபத்திய பறவைக் காய்ச்சல் முடிவுக்கு வந்ததாக வேளாண்மை விக்டோரியா அறிவித்ததைத் தொடர்ந்து, கோழிப் பண்ணையாளர்கள் மீண்டும் வடகிழக்கு விக்டோரியாவில் பண்ணைத் தொழிலை ஆரப்பித்துள்ளனர். கடந்த...

Exmouth கடற்கரையில் அதிகரித்துவரும் ஆபத்தான கடல் உயிரினங்களின் தாக்கம்

Exmouth கடற்கரையில் ஆபத்தான கடல் உயிரினங்களைப் பார்ப்பதும் அவற்றுடன் தொடர்பு கொள்வதும் அதிகரித்து வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு குளிர்காலத்தில் இருந்து தப்பிக்க பார்வையாளர்கள் வடக்கு நோக்கிச்...