Newsஇந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பேரணி

இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பேரணி

-

இந்தியர்களின் குடியேற்றத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் பேரணி நடைபெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில், கல்வி மற்றும் வேலைக்காக 10 லட்சம் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 

March for Australia என்ற பெயரில் நடந்த இந்த பேரணி, சிட்னி, மெல்பேர்ண், அடிலெய்ட் மற்றும் கான்பெரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்றுள்ளது.

இதில், சிட்டினியில் நடைபெற்ற பேரணியில் மட்டும் 5,000 முதல் 8,000 வரையிலான மக்கள் கலந்து கொண்டனர். 

“100 ஆண்டுகளில் கிரேக்கர்கள் மற்றும் இத்தாலியர்கள் வந்ததை விட, 5 ஆண்டுகளில் அதிகளவிலான ஆஸ்திரேலியர்கள் வருகை தந்துள்ளனர். இது ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் கட்டார் கலந்து கொண்டுள்ளார்.

அசம்பாவிதங்களை தவிர்க்க, 100க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சில இடங்களில், போராட்ட குழு மற்றும் காவல்துறையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், காவல்துறையினர் இருவர் காயமடைந்தனர். போராட்ட குழுவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தை கண்டித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, “இனவெறி மற்றும் தங்கள் நாட்டு கலாச்சாரம் மட்டுமே என்ற எண்ணத்தில் வெடித்துள்ள இந்த போராட்டத்திற்கு நவீன அவுஸ்திரேலியாவில் இடம் இல்லை. பல்வேறு கலாச்சாரம் நமது தேசிய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த மற்றும் மதிப்பு மிக்க பகுதி ஆகும்.” என தெரிவித்துள்ளது.

இந்த பேரணியை கடுமையாக எதிர்க்கிறோம் என தொழிலாளர் கட்சியின் மூத்த அமைச்சர் முர்ரே வாட் தெரிவித்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...