Newsஇந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பேரணி

இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பேரணி

-

இந்தியர்களின் குடியேற்றத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் பேரணி நடைபெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில், கல்வி மற்றும் வேலைக்காக 10 லட்சம் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 

March for Australia என்ற பெயரில் நடந்த இந்த பேரணி, சிட்னி, மெல்பேர்ண், அடிலெய்ட் மற்றும் கான்பெரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்றுள்ளது.

இதில், சிட்டினியில் நடைபெற்ற பேரணியில் மட்டும் 5,000 முதல் 8,000 வரையிலான மக்கள் கலந்து கொண்டனர். 

“100 ஆண்டுகளில் கிரேக்கர்கள் மற்றும் இத்தாலியர்கள் வந்ததை விட, 5 ஆண்டுகளில் அதிகளவிலான ஆஸ்திரேலியர்கள் வருகை தந்துள்ளனர். இது ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் கட்டார் கலந்து கொண்டுள்ளார்.

அசம்பாவிதங்களை தவிர்க்க, 100க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சில இடங்களில், போராட்ட குழு மற்றும் காவல்துறையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், காவல்துறையினர் இருவர் காயமடைந்தனர். போராட்ட குழுவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தை கண்டித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, “இனவெறி மற்றும் தங்கள் நாட்டு கலாச்சாரம் மட்டுமே என்ற எண்ணத்தில் வெடித்துள்ள இந்த போராட்டத்திற்கு நவீன அவுஸ்திரேலியாவில் இடம் இல்லை. பல்வேறு கலாச்சாரம் நமது தேசிய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த மற்றும் மதிப்பு மிக்க பகுதி ஆகும்.” என தெரிவித்துள்ளது.

இந்த பேரணியை கடுமையாக எதிர்க்கிறோம் என தொழிலாளர் கட்சியின் மூத்த அமைச்சர் முர்ரே வாட் தெரிவித்துள்ளார்.

Latest news

விக்டோரியாவில் பெண் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம் அதன் நகராட்சி மன்றங்களில் பெண்களின் தலைமையை அதிகரிக்க தொடர்ச்சியான புதிய திட்டங்களைத் திட்டமிட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் நகராட்சி மன்றங்களில் 50% கவுன்சில் தலைமைப்...

சர்வதேச முதலீட்டை நோக்கித் திரும்பும் ஆஸ்திரேலிய வணிக ஜாம்பவான்கள்

ஆஸ்திரேலியாவில் நன்கு அறியப்பட்ட சொத்து முதலீட்டாளரான Scott O’Neill, நியூசிலாந்தில் தனது புதிய முதலீடுகளைச் செய்யத் தயாராகி வருகிறார். ஆஸ்திரேலிய சொத்துச் சந்தையில் விலை உயர்வு/வட்டி விகிதங்கள்...

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்...

சமூக ஊடகங்களில் மருத்துவ ஆலோசனை பெறும் இளம் ஆஸ்திரேலியர்கள்

மெல்பேர்ணில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனையின் புதிய ஆராய்ச்சி, பல இளம் ஆஸ்திரேலியர்கள் சமூக ஊடகங்களிலிருந்து சுகாதார ஆலோசனையைப் பெறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, மனநலம்,...

சமூக ஊடகங்களில் மருத்துவ ஆலோசனை பெறும் இளம் ஆஸ்திரேலியர்கள்

மெல்பேர்ணில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனையின் புதிய ஆராய்ச்சி, பல இளம் ஆஸ்திரேலியர்கள் சமூக ஊடகங்களிலிருந்து சுகாதார ஆலோசனையைப் பெறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, மனநலம்,...

ஆஸ்திரேலியாவிற்கு குறைந்த விலை பொருட்களை வழங்கும் ஒரு கனேடிய நிறுவனம்

கனேடிய தள்ளுபடி சில்லறை விற்பனையாளர் Dollarama, ஆஸ்திரேலிய சங்கிலித் தொடர் நிறுவனமான The Reject Shop-ஐ கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் $259 மில்லியன் மதிப்புடையது, மேலும்...