Newsஆசிய உணவகங்களின் மீன் வடிவ பிளாஸ்டிக் போத்தல்களுக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா

ஆசிய உணவகங்களின் மீன் வடிவ பிளாஸ்டிக் போத்தல்களுக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா

-

ஆஸ்திரேலியாவின் தெற்கு மாகாணங்களில் மீன் வடிவ சோயா சாஸ் போத்தல்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய உத்தரவில், கடைகள் மற்றும் உணவகங்களில் திங்கட்கிழமை முதல் மீன் வடிவ சோயா சாஸ் போத்தல்களை விற்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய மீன் வடிவ போத்தல்கள் உலகம் முழுவதும் உள்ள ஆசிய உணவகங்களில் பிரபலமாக உள்ளது.

ஆனால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய இந்த போத்தல்கள் நூற்றாண்டுகளுக்கான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளன என ஆஸ்திரேலிய துணை பிரதமர் சூசன் க்ளோஸ் தெரிவித்துள்ளார்.

2023 ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தை தொடர்ந்து இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த சட்டத்தின் படி, பிளாஸ்டிக் பைகள், ஸ்ட்ராக்கள் உட்பட பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

சிட்னி பெண் மீது தீவிரவாத சமூக ஊடக விளம்பர குற்றச்சாட்டு

வன்முறை தீவிரவாதத்தை ஊக்குவிக்க சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது மொபைல் போனில் டஜன் கணக்கான தொடர்புடைய கோப்புகளை வைத்திருந்ததாகவும் சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண்...

பெற்றோரைப் பலிகொடுத்து குழந்தைகளுக்கு உதவுகிறதா AI?

AI கல்வி தொழில்நுட்ப செயலிகள் குழந்தைகளை கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் அதே வேளையில், பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் கவனமாக இருப்பது அவசியம்...

விக்டோரியாவில் மூடப்படும் மற்றொரு மருத்துவ வசதி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சமூக சுகாதார அமைப்புகளில் ஒன்றான Cohealth, இந்த ஆண்டு இறுதியில் அதன் பொது மருத்துவர் சேவைகளை மூட முடிவு செய்துள்ளது. நிதி சிக்கல்கள் காரணமாக...

ஆஸ்திரேலியாவில் மூன்று மடங்காக அதிகரித்துள்ள சைபர் குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் பெரிய வணிகங்களுக்கு எதிரான சைபர் குற்றம் ஒரு வருடத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. சைபர் குற்றங்களால் சில வணிகங்கள் ஆண்டுக்கு $200,000...

சந்தேகத்திற்கிடமான பொட்டலம் காரணமாக Australia Post ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி

இரண்டு தபால் வரிசைப்படுத்தும் மையங்களில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஐந்து ஆஸ்திரேலிய தபால் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குயின்ஸ்லாந்தின் Townsville West End-இல் உள்ள...

ஆஸ்திரேலியாவில் மேலும் அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயம்

காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. "காட்டுத்தீ நிலை" என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கை, காட்டுத்தீ...