Newsநிலவில் செடிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள்

நிலவில் செடிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள்

-

ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் நிலவில் செடிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவலட வெளியாகியுள்ளது.

அவர்கள் 2025ஆம் ஆண்டுக்குள் நிலவில் செடிகளை வளர்க்கத் திட்டமிடுகின்றனர். அந்தத் திட்டம் எதிர்காலத்தில் நிலவில் மனிதச் சமூகம் வாழ்வதற்கு வகைசெய்யும் என்று கூறப்படுகிறது.

குவீன்ஸ்லந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செடிகளுக்கான உயிரியல் ஆய்வாளரான பிரெட் வில்லியம்ஸ் (Brett WIlliams) திட்டத்தைப் பற்றி மேலும் விவரித்தார்.

Beresheet 2 எனும் தனியார் இஸ்ரேலிய உந்துகணை விதைகளை நிலவுக்குக் கொண்டுசெல்லும். நிலவுக்குச் சென்றபின் மூடிவைக்கப்பட்ட அறையில் விதைகளுக்கு நீர் அளிக்கப்படும். அவை செடிகளாக வளர்கின்றனவா என்பது கண்காணிக்கப்படும்.

சிறப்பாக வளரும் செடிகள் தேந்தெடுக்கப்படும். புதிய திட்டத்தில், ஆஸ்திரேலியாவில் நீரின்றி உயிர்வாழக்கூடிய “resurrection grass” என்ற செடி நிலவுக்கு அனுப்பப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மனித வாழ்வுக்குத் தேவையான உணவு, மருந்து, உயிர்வாயு போன்றவற்றைச் செடிகள் அளிக்கக்கூடியவை. மனிதர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான செடிகளை நிலவில் வளர்க்கப் புதியத் திட்டம் வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...