Newsசிட்னியில் வெள்ள எச்சரிக்கை - மக்களை வெளியேறுமாறு உத்தரவு

சிட்னியில் வெள்ள எச்சரிக்கை – மக்களை வெளியேறுமாறு உத்தரவு

-

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத் தலைநகர் சிட்னியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருக்கின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. வெள்ள அபாயம் இருப்பதால் அந்தப் பகுதியில் இருக்கும் குடியிருப்பாளர்களை வெளியேற்றுமாறு ஆஸ்திரேலிய அவசரச் சேவைகள் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

தாழ்வான நிலப்பகுதிகளில் இருக்கும் குடியிருப்புப் பேட்டைகளிலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது குறித்து பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு வெள்ளத்திலிருந்து 28 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சாலைகளின் வழியாகப் பயணம் செய்வது ஆபத்தானது என்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்றும் நியூசௌத் வேல்ஸின் அவசரச் சேவைப் பிரிவு ஆணையர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே மழைப்பொழிவு குறைந்துள்ள வேளையிலும், வெள்ள நீர் தொடர்ச்சியாக ஆறுகளில் சென்று கலப்பதாக மாநிலத்தின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...