Newsசர்வதேசப் புகழ் பெற்ற ஈழத்து 32 வயது ஆங்கில எழுத்தாளர்: அனுக்...

சர்வதேசப் புகழ் பெற்ற ஈழத்து 32 வயது ஆங்கில எழுத்தாளர்: அனுக் அருட்பிரகாசம்

-

அனுக் அருட்பிரகாசம்1988 ஆம் ஆண்டு பிறந்த இலங்கையை சேர்ந்த 32 வயது ஆங்கில எழுத்தாளர்.

தமிழிலும் எழுதுபவர். தமிழ் ஈழப் போராட்ட வாழ்வியலை வரலாற்றின் பின்னணியில் வைத்துப் பேசும் ஆங்கிலத்தில் இவரது எழுத்துகள் சர்வதேசப் பார்வை கொண்டவை.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் எழுதிய ஆங்கில நாவல்களின் மூலம் சர்வதேச கவனத்தைக் கவர்ந்துள்ள ஈழத் தமிழரான அனுக் அருட்பிரகாசம் ஆங்கில எழுத்தின் மூலம் உலகக் கவனத்தை ஈர்க்கும் இளைய சக்தியாக வளர்ந்து வருகிறார்.

எனது நண்பரும் ஜெர்மானிய எழுத்தாளருமான சாஸா ஸ்டானிசிக் போல தங்களது உள்நாட்டுப் போரைச் சுற்றி பின்னப்பட்ட கதைகளின் மூலம் இலக்கியத்தில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இருக்கிறார்.
2016இல் வெளிவந்த இவரது The Story of a Brief Marriage எனும் ஆங்கில நாவல் பிரெஞ்சு, ஜெர்மன், செக், மாண்டரின் சீனம், டச்சு, இத்தாலி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்நாவல் 2009இல் நிகழ்ந்த ஈழத்தின் இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரை, மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. ”இது “ அப்பாவிகளுக்கும் வரலாற்றில் ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு நாவல்” என்றும் “மனிதகுலத்தின் மாண்பின் முன்னால் மண்டியிட வைக்கிறது “ என்றும் The New York Times இதழால் பாராட்டப்பட்டது. ”2016இல் வெளிவந்த மிகச் சிறந்த நாவல்” என்று The Wall Street Journal, NPR, Financial Times. இதழ்களால் கணிக்கப்பட்டது.

இவரது இரண்டாவது நாவலான A Passage North (2021) என்பது ஈழத்தின் உள்நாட்டுப் போரின் வன்முறைகளைப் பேசும் ஒரு நாவல்.

இவர் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் நியூயார்க், டொரொண்ட்டோ ஆகிய இடங்களில் வாழும் புலம்பெயர்ந்த அம்மாக்கள், மகள்கள் பற்றியதாக அமைகிறது.

Latest news

டிரம்பை நிராகரித்து அல்பானீஸ் இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் 

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் Xi Jinping மற்றும் பிரதமர்...

அமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. H-1B விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள்...

ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிப்பு பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் போராட்டத்தில் வெளியான புதிய விரிவான படங்கள்

ஆஸ்திரேலிய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, புகைப்படங்களின் தொகுப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது “Pest Australia’s Disease Image Library (PaDIL)” என்று அழைக்கப்படும் தேசிய...

ஆபத்தில் உள்ள வயது வந்தோருக்கான மாற்றுத்திறனாளி பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனம்

முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான Annecto, தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த...

ஆஸ்திரேலியாவின் வரிகள் இரட்டிப்பாக்கப்படும் – டிரம்ப் மிரட்டல்

ஆஸ்திரேலியா மீது விதிக்கப்படும் வரிகளை இரட்டிப்பாக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கும் 200 சதவீத வரியை அறிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும்,...

தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாக உள்ள ChatGPT

Stanford பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ChatGPT போன்ற AI chatbots கடுமையான மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் தெரியவந்துள்ளது. இது மனநோய், பித்து மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்...