Newsசர்வதேசப் புகழ் பெற்ற ஈழத்து 32 வயது ஆங்கில எழுத்தாளர்: அனுக்...

சர்வதேசப் புகழ் பெற்ற ஈழத்து 32 வயது ஆங்கில எழுத்தாளர்: அனுக் அருட்பிரகாசம்

-

அனுக் அருட்பிரகாசம்1988 ஆம் ஆண்டு பிறந்த இலங்கையை சேர்ந்த 32 வயது ஆங்கில எழுத்தாளர்.

தமிழிலும் எழுதுபவர். தமிழ் ஈழப் போராட்ட வாழ்வியலை வரலாற்றின் பின்னணியில் வைத்துப் பேசும் ஆங்கிலத்தில் இவரது எழுத்துகள் சர்வதேசப் பார்வை கொண்டவை.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் எழுதிய ஆங்கில நாவல்களின் மூலம் சர்வதேச கவனத்தைக் கவர்ந்துள்ள ஈழத் தமிழரான அனுக் அருட்பிரகாசம் ஆங்கில எழுத்தின் மூலம் உலகக் கவனத்தை ஈர்க்கும் இளைய சக்தியாக வளர்ந்து வருகிறார்.

எனது நண்பரும் ஜெர்மானிய எழுத்தாளருமான சாஸா ஸ்டானிசிக் போல தங்களது உள்நாட்டுப் போரைச் சுற்றி பின்னப்பட்ட கதைகளின் மூலம் இலக்கியத்தில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இருக்கிறார்.
2016இல் வெளிவந்த இவரது The Story of a Brief Marriage எனும் ஆங்கில நாவல் பிரெஞ்சு, ஜெர்மன், செக், மாண்டரின் சீனம், டச்சு, இத்தாலி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்நாவல் 2009இல் நிகழ்ந்த ஈழத்தின் இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரை, மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. ”இது “ அப்பாவிகளுக்கும் வரலாற்றில் ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு நாவல்” என்றும் “மனிதகுலத்தின் மாண்பின் முன்னால் மண்டியிட வைக்கிறது “ என்றும் The New York Times இதழால் பாராட்டப்பட்டது. ”2016இல் வெளிவந்த மிகச் சிறந்த நாவல்” என்று The Wall Street Journal, NPR, Financial Times. இதழ்களால் கணிக்கப்பட்டது.

இவரது இரண்டாவது நாவலான A Passage North (2021) என்பது ஈழத்தின் உள்நாட்டுப் போரின் வன்முறைகளைப் பேசும் ஒரு நாவல்.

இவர் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் நியூயார்க், டொரொண்ட்டோ ஆகிய இடங்களில் வாழும் புலம்பெயர்ந்த அம்மாக்கள், மகள்கள் பற்றியதாக அமைகிறது.

Latest news

வேலை வெட்டுக்கு தயாராகும் Telstra நிறுவனம்

வணிகம் முழுவதும் மற்றொரு சுற்று பெருமளவிலான வெட்டுக்கள் பரிசீலிக்கப்படுவதை Tesla உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் முதலில் ஊழியர்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என்று வலியுறுத்துகிறது. இன்று, நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின்...

விக்டோரியாவில் வீட்டுவசதி கட்டுமானம் குறித்த சமீபத்திய அறிக்கை

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, மே 2025 இல் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொத்த வீட்டு அலகுகளின் எண்ணிக்கை 3.2% அதிகரித்து 15,212 ஆக உள்ளது. தனியார்...

ஆஸ்திரேலியாவில் மூடப்பட்ட இரண்டு பெரிய வேர்க்கடலை தொழிற்சாலைகள்

Bega குழுமம் அதன் Peanut தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் சுமார் 150 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குயின்ஸ்லாந்தின் Kingaroy மற்றும்...

சீனாவில் பாலர் பள்ளியில் உணவு விஷம் ஏற்பட்டதால் 233 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

வடமேற்கு சீனாவில் உள்ள ஒரு பாலர் பள்ளியில் ஏற்பட்ட உணவு விஷத்தால் 233 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை வண்ணப்பூச்சு குழந்தைகளின்...

சீனாவில் பாலர் பள்ளியில் உணவு விஷம் ஏற்பட்டதால் 233 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

வடமேற்கு சீனாவில் உள்ள ஒரு பாலர் பள்ளியில் ஏற்பட்ட உணவு விஷத்தால் 233 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை வண்ணப்பூச்சு குழந்தைகளின்...

திரும்ப அழைக்கப்பட்டுள்ள Power bank மாடல்கள்

பல்வேறு Power Bankகள் அதிக வெப்பமடைந்து தீப்பிடித்து எரியக்கூடும் என்ற அச்சம் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு நுகர்வோருக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. Amazon, eBay மற்றும் Anker...