Newsஆஸ்திரேலியா செல்ல இலங்கையர்கள் கண்டுபிடித்த வழி

ஆஸ்திரேலியா செல்ல இலங்கையர்கள் கண்டுபிடித்த வழி

-

இலங்கையில் இருந்து கடந்த ஓராண்டில் 183 பேர் ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக நுழைய முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பலர் இந்தியாவின் கேரளா வழியாக நுழைய முயன்றதாகவும் ஆஸ்திரேலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைவர் டெல்லியில் அக்டோபர் 14ம் திகதி முதலாம் 20ம் திகதிவரை நஎடைபெற்ற ஆசிய கடலோர காவல்படை அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ரியர் அட்மிரல் ஜோன்ஸ் பங்கேற்றிருந்தார்.

இதில் அவர் பேசியபோது, ஆசிய கடலோர காவல்படை அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தின் மூலமாக ஆஸ்திரேலியா, ஆசிய பிராந்தியத்தில் உள்ள அனைத்து முக்கிய கடலோர காவல் முகமைகளுடன் நீண்டகால உறவுகளை ஏற்படுத்தி அதை வலுப்படுத்தவும் சிவில் கடல்சார் பாதுகாப்பு விஷயங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், கடலில் நடைபெறும் குற்றங்களை எதிர்த்து போராடி அவற்றைத் தடுப்பதற்கு இந்த மண்டலத்தில் உள்ள அனைத்து கூட்டு செயல்பாட்டு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு ஆஸ்திரேலியா உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஆஸ்திரேலியா சமீபகாலமாக சிவில் கடல்சார் பாதுகாப்பில் இலங்கையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு கடல்வழி ஆட்கள் கடத்தல் முயற்சிகளைத் தடுக்க இலங்கை கடற்படை அயராது உழைத்ததால் கடத்தல் மூலமாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 183 பேரை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பியுள்ளது என்றும் சமீபத்தில் கேரளாவில் இருந்து படகு மூலமாக சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற பலர் கைது செய்யப்பட்டதை அறிந்துள்ளதாகவும்அவர் தெரிவித்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...