Newsதண்டனைகளை அதிகரிக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியா!

தண்டனைகளை அதிகரிக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியா!

-

இணையத் தாக்குதலில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படும் சம்பவங்களில் நிறுவனங்களுக்கு எதிரான தண்டனையை அதிகரிக்க ஆஸ்திரேலியா திட்டமிடுகிறது.

கடந்த சில வாரங்களில் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய மக்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு, நிதி, அரசாங்கத்துறைகள் உச்ச விழிப்புநிலையில் உள்ளன. கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் Singtel நிறுவனத்துக்குச் சொந்தமான Optus நிறுவனம் இணையத் தாக்குதலுக்கு இலக்கானது.

சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டன. இம்மாதம் ஆஸ்திரேலியாவின் சுகாதாரக் காப்புறுதி நிறுவனமான Medibank Private இணையத் தாக்குதலுக்கு ஆளானது.

100 வாடிக்கையாளர்களின் மருத்துவ விவரம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் திருடுபோயின.தனிப்பட்ட விவரங்கள் களவாடப்படும் நிறுவனங்களுக்குச் சுமார் இரண்டே கால் மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

அதை 50 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் வரை உயர்த்தத் திட்டமிடப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு வாங்கும்போது அதைப் பாதுகாப்பது நிறுவனத்தின் கடமை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...