Newsஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு - சமாளிக்க முடியாமல் திணறல்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – சமாளிக்க முடியாமல் திணறல்

-

ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வெண்ணெய் முதல் பால்மாவு வரை பால் பொருள்களுக்குப் பஞ்சம் ஏற்படக்கூடிய அபாயம் எழுந்துள்ளது.

அளவுக்கு அதிகமான வெப்பமும் வறட்சியும் மாடுகளுக்கு மனவுளைச்சலை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அது குறித்து Bloomberg செய்தி நிறுவனம் தகவல் அளித்தது. அதிகரிக்கும் வெப்பநிலையால் பசுக்கள் குறைந்த பாலை உற்பத்தி செய்கின்றன..

வறட்சி, கடுமையான மழை ஆகியவற்றால் சாப்பிடக்கூடிய புல்லும் அவ்வளவாக இல்லை என கூறப்படுகின்றது.

உலகின் பால் உற்பத்தி வட்டாரங்கள் சிக்கலைச் எதிர்நோக்குகின்றன. அமெரிக்காவின் பால் பொருள் உற்பத்தித்துறை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஆண்டுதோறும் 2.2 பில்லியன் டொலர் இழக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் முன்னுரைத்துள்ளனர்.

பால் பொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் பண்ணையாளர்கள் சிலர் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் தொழிலை விட்டு விலகுகின்றனர்.

அந்நாட்டில் பால் பொருள்களின் உற்பத்தி இவ்வாண்டு அரை மில்லியன் மெட்ரிக் டன் வரை குறையக்கூடும் என்று Bloomberg குறிப்பிட்டுள்ளது.

உலகில் ஆக அதிக அளவில் பாலை உற்பத்தி செய்யும் இந்தியா, உலகின் பால் பொருள்களில் கால்வாசியை வழங்குகிறது. அந்நாட்டில் பால் பெரும்பாலும் சிறு பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

பண்ணையாளர்கள் வெப்பத்தைத் தணிக்கக் குளிரூட்டும் கருவிகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இருப்பினும் சிலருக்கு அது கட்டுப்படியான தெரிவு அல்ல.

Amul போன்ற மாபெரும் நிறுவனங்கள் இருப்பைப் பாதுகாப்பதற்கான சவாலைச் சந்திக்கின்றன. நிலைமை தொடர்ந்தால் வருங்காலத்தில் பால் பொருள்களுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...