Newsஆஸ்திரேலிய பெண்ணை கொன்றுவிட்டு தப்பிய இந்தியர் - தகவல் கொடுத்தால் 633,000...

ஆஸ்திரேலிய பெண்ணை கொன்றுவிட்டு தப்பிய இந்தியர் – தகவல் கொடுத்தால் 633,000 டொலர் பரிசு

-

ஆஸ்திரேலியாவில் கொலை செய்துவிட்டு இந்தியா தப்பிய கொலையாளி பற்றி துப்பு கொடுத்தால் 633,000 டொலர் பரிசு வழங்கப்படும் என ஆஸ்திரேலிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வாங்கட்டி கடற்கரையில் தனது நாயுடன் நடைபயிற்சி சென்ற டோயா கார்டிங்லி என்ற 24 வயதுடைய பெண் கொலை செய்யப்பட்டார்.

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடந்த இந்தக் கொலையை, ஆஸ்திரேலியாவில் இன்னிஸ்பெயில் என்ற இடத்தில் ஆண் தாதியாக வேலை செய்த ராஜ்விந்தர் கிங் என்ற 38 வயதுடையவரை கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் இவர், கொலை நடந்த மறுநாளில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை ஆஸ்திரேலியாவில் விட்டு விட்டு இந்தியாவுக்கு தப்பிவிட்டார்.

இது உறுதியாகி உள்ளது. இவரை 4 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய பொலிஸார் தேடுகின்றனர். ஆனால் இன்னும் சிக்கவில்லை. இந்த நிலையில், இவரை கைது செய்வதற்கு துப்பு தந்து உதவுபவருக்கு 633,000 ஆஸ்திரேலிய மொடர் ரொக்கப்பரிசை வழங்குவதாக குயின்ஸ்லாந்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இது அங்கு அறிவிக்கப்பட்டுள்ள மிக உயர்ந்த சன்மானம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துப்பு பற்றி தகவல் அளிக்க குயின்ஸ் லேண்ட் பொலிஸார் ஒரு வாட்ஸ்அப் இணைப்பை உருவாக்கியுள்ளனர்.

ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாருக்கு +911141220972 என்ற எண்ணில் அழைக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...