Newsஆஸ்திரேலியாவை உலுக்கும் வெள்ளம் - இந்த ஆண்டின் மிகப்பெரிய வெள்ளம்

ஆஸ்திரேலியாவை உலுக்கும் வெள்ளம் – இந்த ஆண்டின் மிகப்பெரிய வெள்ளம்

-

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் கொட்டித் தீர்த்த அடைமழை காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, உட்புறப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இருப்பிடங்களில் இருந்து வெளியேறுமாறு அப்பகுதிவாழ் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள 4ஆவது மிகப்பெரிய வெள்ளமாகும்.

நியூ சவுத் வேல்ஸ்சின் தென்மேற்குப் பகுதியிலும் விக்டோரியாவின் வடகிழக்குப் பகுதியிலும் ஒரே இரவில் மோசமான வானிலையால் ஆற்றின் கரைகள் உடைப்பெடுத்தன. வெள்ளப் பேரிடரால் ஏற்கனவே சோர்ந்து போயிருக்கும் மக்களுக்குத் துயர் மேல் துயர் ஏற்பட்டுள்ளது.

திடீர் வெள்ளம் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது என்றும் மீட்பு முயற்சிகளில் மத்திய அரசாங்கம் மாநிலங்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி (Anthony Albanese) Twitterரில் பதிவிட்டார்.

நியூ சவுத் வேல்ஸின் (New South Wales) கிராமப்புறங்களில் சாலைகள், பாலங்கள், பண்ணைகள் ஆகிய அனைத்தும் நீரில் மூழ்கின.

சிட்னியில் (Sydney) இருந்து வடமேற்கில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Molong என்னும் இடம்தான் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

வெள்ளத்தில் கப்பல் கொள்கலன்களும் வீட்டுப் பொருள்களும் மிதக்கும் காட்சி அடங்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

கப்பல் கொள்கல லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வெள்ளம் ஏறிய சாலையில் நகர முடியாமல் சிக்கியிருப்பதால் Molongகிற்கு அவசர உதவிக் குழுவை அனுப்பும் பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

Latest news

பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் – பலர் படுகாயம்

சீனாவின் Zhenxiong மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்து நபர் ஒருவரின் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்புடைய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் உட்பட 23...

ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த அமெரிக்கப் பெண்

அமெரிக்காவில் பெண்ணொருவர் அரிதான ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பெற்றெடுத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸாசை சேர்ந்த தம்பதி ஜோனதன் (37), மெர்சிடிஸ் சந்து (34). இவர்களுக்கு...

உக்ரைன்-ரஷ்யா போர் முனைக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் – அம்பலமானது மோசடி

உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் போர் முனைகளுக்கு இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை அனுப்பும் மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள...

பால்டிமோர் பாலத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு சடலம்

அமெரிக்காவின் பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்ட உடல் மார்ச் 26 அன்று பால்டிமோர்...

ஸ்மார்ட்போன்அடிமைத்தனத்தின்படி நாடுகளின் தரவரிசையில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா

ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தின்படி நாடுகளின் தரவரிசையை உள்ளடக்கிய சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்மார்ட்போன்களுக்கு அதிகம் அடிமையான நாடுகளில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 36.8 சதவீதமாக...

NSW இல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கத்திகளை விற்க தடை

நியூ சவுத் வேல்ஸில் கத்திகளை விற்பனை செய்வதற்கான வயது வரம்பை நிர்ணயிக்கும் புதிய சட்டத்திற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கத்திக்குத்து...