Newsஆஸ்திரேலியாவை உலுக்கும் வெள்ளம் - இந்த ஆண்டின் மிகப்பெரிய வெள்ளம்

ஆஸ்திரேலியாவை உலுக்கும் வெள்ளம் – இந்த ஆண்டின் மிகப்பெரிய வெள்ளம்

-

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் கொட்டித் தீர்த்த அடைமழை காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, உட்புறப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இருப்பிடங்களில் இருந்து வெளியேறுமாறு அப்பகுதிவாழ் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள 4ஆவது மிகப்பெரிய வெள்ளமாகும்.

நியூ சவுத் வேல்ஸ்சின் தென்மேற்குப் பகுதியிலும் விக்டோரியாவின் வடகிழக்குப் பகுதியிலும் ஒரே இரவில் மோசமான வானிலையால் ஆற்றின் கரைகள் உடைப்பெடுத்தன. வெள்ளப் பேரிடரால் ஏற்கனவே சோர்ந்து போயிருக்கும் மக்களுக்குத் துயர் மேல் துயர் ஏற்பட்டுள்ளது.

திடீர் வெள்ளம் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது என்றும் மீட்பு முயற்சிகளில் மத்திய அரசாங்கம் மாநிலங்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி (Anthony Albanese) Twitterரில் பதிவிட்டார்.

நியூ சவுத் வேல்ஸின் (New South Wales) கிராமப்புறங்களில் சாலைகள், பாலங்கள், பண்ணைகள் ஆகிய அனைத்தும் நீரில் மூழ்கின.

சிட்னியில் (Sydney) இருந்து வடமேற்கில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Molong என்னும் இடம்தான் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

வெள்ளத்தில் கப்பல் கொள்கலன்களும் வீட்டுப் பொருள்களும் மிதக்கும் காட்சி அடங்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

கப்பல் கொள்கல லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வெள்ளம் ஏறிய சாலையில் நகர முடியாமல் சிக்கியிருப்பதால் Molongகிற்கு அவசர உதவிக் குழுவை அனுப்பும் பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...