Newsஆஸ்திரேலியாவை உலுக்கும் வெள்ளம் - இந்த ஆண்டின் மிகப்பெரிய வெள்ளம்

ஆஸ்திரேலியாவை உலுக்கும் வெள்ளம் – இந்த ஆண்டின் மிகப்பெரிய வெள்ளம்

-

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் கொட்டித் தீர்த்த அடைமழை காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, உட்புறப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இருப்பிடங்களில் இருந்து வெளியேறுமாறு அப்பகுதிவாழ் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள 4ஆவது மிகப்பெரிய வெள்ளமாகும்.

நியூ சவுத் வேல்ஸ்சின் தென்மேற்குப் பகுதியிலும் விக்டோரியாவின் வடகிழக்குப் பகுதியிலும் ஒரே இரவில் மோசமான வானிலையால் ஆற்றின் கரைகள் உடைப்பெடுத்தன. வெள்ளப் பேரிடரால் ஏற்கனவே சோர்ந்து போயிருக்கும் மக்களுக்குத் துயர் மேல் துயர் ஏற்பட்டுள்ளது.

திடீர் வெள்ளம் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது என்றும் மீட்பு முயற்சிகளில் மத்திய அரசாங்கம் மாநிலங்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி (Anthony Albanese) Twitterரில் பதிவிட்டார்.

நியூ சவுத் வேல்ஸின் (New South Wales) கிராமப்புறங்களில் சாலைகள், பாலங்கள், பண்ணைகள் ஆகிய அனைத்தும் நீரில் மூழ்கின.

சிட்னியில் (Sydney) இருந்து வடமேற்கில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Molong என்னும் இடம்தான் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

வெள்ளத்தில் கப்பல் கொள்கலன்களும் வீட்டுப் பொருள்களும் மிதக்கும் காட்சி அடங்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

கப்பல் கொள்கல லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வெள்ளம் ஏறிய சாலையில் நகர முடியாமல் சிக்கியிருப்பதால் Molongகிற்கு அவசர உதவிக் குழுவை அனுப்பும் பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...