Breaking Newsசிட்னி வந்த கப்பலில் 800 பேருக்கு கொவிட் - பாதியில் கைவிடப்பட்ட...

சிட்னி வந்த கப்பலில் 800 பேருக்கு கொவிட் – பாதியில் கைவிடப்பட்ட பயணம்

-

சிட்னி வந்த தி மஜெஸ்டிக் பிரின்சஸ் (The Majestic Princess) பயணக்கப்பலில் நூற்றுக்கணக்கான பயணிகளிடையே COVID-19 சம்பவங்கள் பதிவாயின.

அதன் காரணமாக 12 நாள் பயணத்தைப் பாதியில் கைவிட்டுக் கப்பல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நிறுத்தப்பட்டது.

கப்பலில் 4,600 பயணிகளும் ஊழியர்களும் பயணம் சென்றுகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

3,300 பயணிகளைச் சோதித்ததில் சுமார் 800 பயணிகளுக்கும் சில ஊழியர்களுக்கும் கோவிட் நோய் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

நோய்த்தொற்று ஏற்பட்ட பயணிகளுக்கு லேசான அறிகுறிகள் இருந்தன அல்லது அறவே அறிகுறிகள் இல்லை.

அவர்கள் கப்பலிலிருந்து வெளியேறி 5 நாள்களுக்குத் தனிமைப்படுத்துமாறு ஆலோசனை கொடுக்கப்பட்டது.

நோய்த்தொற்றினால் பாதிக்கப்படாதவர்கள் கப்பலைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்கள்.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...