Melbourneமெல்பேர்ணுக்கு விமானம் மூலம் வந்த மூவருக்கு தட்டம்மை!

மெல்பேர்ணுக்கு விமானம் மூலம் வந்த மூவருக்கு தட்டம்மை!

-

சிங்கப்பூரிலிருந்து மெல்பேர்ண் நகருக்குத் திரும்பிய 3 பயணிகளுக்குத் தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் கடந்த திங்கட்கிழமை (14 நவம்பர்) Qantas விமானம் QF36இல் பயணம் செய்ததாக விக்டோரியா மாநிலத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது

பாதிக்கப்பட்ட மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்குத் தட்டம்மை இருந்தது பயணத்தின்போதே தெரிய வந்தது என்றும் அவர்கள் உடனடியாக மருத்துவரை நாடினர் என்றும் அமைச்சு கூறியது.

பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்த விமானமும் மெல்பேர்ண் விமான நிலையமும் நோய் பரவக்கூடிய தளங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

QF36 விமானத்தில் பயணம் செய்தவர்கள், நவம்பர் 15ஆம் திகதி காலை 6:10 மணி முதல் 8:40 மணி வரை மெல்பேர்ண் விமான நிலையத்தின் அனைத்துலக வருகைப் பகுதியில் இருந்தவர்கள் ஆகியோர் டிசம்பர் 3ஆம் திகதி வரை தங்கள் உடல்நலத்தைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

தட்டம்மை நெருங்கிய தொடர்பில் எளிதில் பரவக்கூடியது. குறிப்பாகத் தட்டம்மைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கிடையே அது அதிகமாகப் பரவும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறுவர்களுக்கும் பலவீனமான நோய் எதிர்ப்புச் சக்திகொண்ட பெரியவர்களுக்கும் தட்டம்மை ஏற்படும் அபாயம் அதிகம்.

இவ்வாண்டு விக்டோரியாவில் 5 தட்டம்மைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

Latest news

அதிகரித்து வரும் கட்டணங்களால் குளிரில் வாடும் ஆஸ்திரேலியர்கள்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஹீட்டர்களின் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. அதிக மின்சாரக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியர்களில் 13...

குற்றங்கள் பற்றிய தகவல்களைப் பரப்புபவர்களுக்கு ஒரு அறிவிப்பு

அனைத்து ஆஸ்திரேலியர்களும் குழு அரட்டைகளிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ குற்றம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடத்தை பற்றி பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய தகவல்களை...

70 பில்லியன் டாலர் வரி வருவாயை திரட்ட புதிய வரிகள் அறிமுகம்

70 பில்லியன் டாலர் வரி வருவாயை திரட்ட வணிக, தொழிற்சங்க மற்றும் சமூகத் தலைவர்களால் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய பொருளாதாரம் குறித்து விவாதிக்க கான்பெராவில் கூடியபோது,...

ஆபத்தில் உள்ள மருந்துத் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நிதித் தகவல்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருந்து விநியோகஸ்தர்களில் ஒன்றான DBG Health, சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு சுமார் $2 பில்லியன் வருவாய் ஈட்டும் நிறுவனம், அதன்...

காசாவில் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்

காசா பகுதியில் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலுடன் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக பாலஸ்தீன ஆயுதக் குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எகிப்து மற்றும் கத்தார் சமர்ப்பித்த...

தொடரும் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாயைத் தேடும் பணி

பெர்த்தில் புயல் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்க போலீசார் சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். நேற்று முந்தினம் மதியம் 1 மணியளவில் தொழிலாளர்கள் குழுவினால்...