Breaking Newsதடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவந்தால் $4440 அபராதம்!

தடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவந்தால் $4440 அபராதம்!

-

ஆஸ்திரேலியாவின் Biosecurity Act 2015 -உயிரியல் பாதுகாப்பு சட்டம் 2015 திருத்தியமைக்கப்பட்டுள்ளதுடன் இச் சட்டத்தை மீறுபவர்களுக்கான அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த திருத்தங்கள், Biosecurity அச்சுறுத்தல்கள் தொடர்பில் விரைவாக செயல்படுவதற்கு அரசிற்கு உதவும்.

இந்த புதிய சட்டத்திருத்தத்தின்கீழ், தடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்கள் உட்பட, உயிரியல் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை திருட்டுத்தனமாக ஆஸ்திரேலியாவிற்குள் எடுத்துவருபவர்கள் மற்றும் அவற்றை பிரகடனம் செய்யத்தவறுபவர்களுக்கான on the spot அபராதம், 4440 டொலர்கள் வரை அதிகரிக்கப்படுகிறது.

மிகக் கடுமையான விதிமீறல்களைச் செய்வோர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு 266,400 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படக் கூடும்.

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் Biosecurity அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப அபராதங்களும் மாற்றியமைக்கப்படுவதாக, வேளாண்மை, மீன்வள மற்றும் வனவியல் அமைச்சர் Murray Watt தெரிவித்தார்.

“புதிய நடவடிக்கைகள் ஆஸ்திரேலியாவின் உயிர் பாதுகாப்பு முறையை வலுப்படுத்தவும், 70.3 பில்லியன் டொலர் மதிப்புள்ள விவசாய ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்கவும், விவசாய விநியோகச் சங்கிலி முழுவதும் உள்ள 1.6 மில்லியன் வேலைகளைப் பாதுகாக்கவும், நமது வாழ்க்கை முறையைப் பாதுகாக்கவும் உதவும்” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“புதிய சட்டத்திருத்தத்தின்படி ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்ட பொருட்களை திருட்டுத்தனமாக எடுத்துவருபவர்கள் மற்றும் பிரகடனப்பத்திரத்தில் பொய்யான தகவல்களை குறிப்பிடுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு அந்த இடத்தில்வைத்து 4440 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் – இது முன்னர் விதிக்கப்பட்டதை விட கிட்டத்தட்ட 2000 டொலர்கள் அதிகமாகும்” எனவும் அமைச்சர் Murray Watt தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு சட்டங்களின்கீழ் சில பொருட்களை நாட்டுக்குள் எடுத்துவரமுடியாது. அவ்வாறான பொருட்கள் எமக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்துறைக்கு அவை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

Agriculture.gov.au என்ற இணையத்தளத்தில் ஆஸ்திரேலியாவிற்குள் என்னென்ன பொருட்களைக் கொண்டுவரலாம் என்னென்ன பொருட்களைக் கொண்டுவர முடியாது என்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வரும்போது அனைத்து பயணிகளும் Incoming Passenger Card-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். உணவுப் பொருட்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் தொடர்பான பொருட்கள் போன்ற உயிரியல் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை declare- பிரகடனப்படுத்த வேண்டும்.

Biosecurity அதிகாரிகள் நீங்கள் பிரகடனம் செய்த பொருட்களை நாட்டுக்குள் அனுமதிக்க முடியுமா இல்லையா என்பதை ஆய்வுசெய்து முடிவெடுப்பார்கள்.

ஆபத்தான தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துவருபவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான அனுமதிகூட சிலவேளைகளில் மறுக்கப்படலாம்.

Foot and Mouth நோய்ப்பரவல் உள்ளிடவற்றின் காரணமாக ஆஸ்திரேலியா தனது Biosecurity பாதுகாப்பை தொடர்ச்சியாக வலுப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றன 3 விக்டோரியன் நகரங்கள்

விக்டோரியாவில் உள்ள மூன்று நகரங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றுள்ளன.இந்த போட்டியில் விக்டோரியாவில் உள்ள 25 நகரங்கள் வருடாந்திர சிறந்த...

Influenza B வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் Influenza B வைரஸ் தொற்று சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் Influenza-இற்கான ஒத்துழைப்பு...

டீன் ஏஜ் கணக்குகளுக்கு Meta எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளைஞர்களின் சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த Meta மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இது இளைஞர்களைப் பாதுகாப்பற்ற அல்லது தேவையற்ற இணைப்புகளிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் செய்தி...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

பெண்களின் மாதவிடாய் தொடர்பான மறைக்கப்பட்ட ஆபத்துகள்

மாதவிடாய் நின்ற ஹார்மோன் சிகிச்சை (MHT) நிறுத்தப்பட்ட சில ஆண்டுகளில் பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியப் பெண்கள்...