Newsசிறார்களுக்கு சிகரெட் விற்பனை செய்ய தடை - கடுமையான விதிகளை அமுல்படுத்திய...

சிறார்களுக்கு சிகரெட் விற்பனை செய்ய தடை – கடுமையான விதிகளை அமுல்படுத்திய நியூசிலாந்து!

-

சிறார்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதை தடை செய்யும் கடுமையான விதிமுறைகளை நியூசிலாந்து அமல்படுத்தியுள்ளது.

எனவே, ஜனவரி 01, 2009 க்குப் பிறகு பிறந்த எவரும் சிகரெட் வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது, அதே விதி அவர்களின் வாழ்நாள் முழுவதும் நடைமுறையில் இருக்கும்.

இந்த விதிமுறைகளை மீறினால் விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் இருவருக்கும் NZ$150,000 அபராதம் விதிக்கப்படும்.

2025ஆம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகையில்லா நாடாக மாற்றுவதுதான் நோக்கம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

புதிய திருத்தங்களில் சிகரெட்டில் உள்ள நிகோடின் அளவைக் குறைப்பது மற்றும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சிகரெட் விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கையை 90 சதவீதம் குறைக்க வேண்டும்.

அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம் குறைவடைந்தாலும் புகைப்பிடிப்பதால் நோய்வாய்ப்படும் மக்களின் செலவு கணிசமாகக் குறையும் என நியூசிலாந்து அரசாங்கம் வலியுறுத்துகிறது.

எவ்வாறாயினும், இந்த முன்மொழிவு சட்டவிரோத சிகரெட்டுகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று நியூசிலாந்து எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது.

Latest news

பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் – பலர் படுகாயம்

சீனாவின் Zhenxiong மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்து நபர் ஒருவரின் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்புடைய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் உட்பட 23...

ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த அமெரிக்கப் பெண்

அமெரிக்காவில் பெண்ணொருவர் அரிதான ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பெற்றெடுத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸாசை சேர்ந்த தம்பதி ஜோனதன் (37), மெர்சிடிஸ் சந்து (34). இவர்களுக்கு...

உக்ரைன்-ரஷ்யா போர் முனைக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் – அம்பலமானது மோசடி

உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் போர் முனைகளுக்கு இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை அனுப்பும் மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள...

பால்டிமோர் பாலத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு சடலம்

அமெரிக்காவின் பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்ட உடல் மார்ச் 26 அன்று பால்டிமோர்...

ஸ்மார்ட்போன்அடிமைத்தனத்தின்படி நாடுகளின் தரவரிசையில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா

ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தின்படி நாடுகளின் தரவரிசையை உள்ளடக்கிய சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்மார்ட்போன்களுக்கு அதிகம் அடிமையான நாடுகளில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 36.8 சதவீதமாக...

NSW இல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கத்திகளை விற்க தடை

நியூ சவுத் வேல்ஸில் கத்திகளை விற்பனை செய்வதற்கான வயது வரம்பை நிர்ணயிக்கும் புதிய சட்டத்திற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கத்திக்குத்து...