Breaking Newsமெஸ்ஸியின் காயத்தால் தடுமாற்றத்தில் அர்ஜென்டினா - FIFA உலகக்கிண்ணம்

மெஸ்ஸியின் காயத்தால் தடுமாற்றத்தில் அர்ஜென்டினா – FIFA உலகக்கிண்ணம்

-

கட்டாரில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்து திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

அந்தவகையில், நாளை நடைபெறவுள்ள 3-வது இடத்திற்கான போட்டியில் குரோசியா- மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அத்தோடு, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில்  பிரான்ஸ்- அர்ஜென்டினா அணிகள் மோதவுள்ளன.

அர்ஜென்டினா முதல் போட்டியில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான அந்த அணியின் தலைவர் மெஸ்சிக்கு இதுதான் கடைசி உலகக் கிண்ணம். இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

இதனால் மெஸ்சிக்கு உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்பில்லை என கருதப்பட்டது. ஆனால், அதன்பின் மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது சிறப்பான விளையாட்டால் தற்போது அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

குரோசியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். அதன்பின் அல்வாரெஸ் கோல் அடிக்க துணை புரிந்தார்.

இந்த போட்டியின்போது மெஸ்சி தசைப்பிடிப்பால் அவதிப்பட்டாராம். 100 சதவீதம் உடற்தகுதியுடன் இல்லையாம். இருந்தாலும் விளையாடுகிறேன் என மெஸ்சி தன்னம்பிக்கையுடன் விளையாடினாராம்.

தற்போது இடது காலில் தசைப்பிடிப்பு (hamstring) ஏற்பட்டதன் காரணமாக நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இதனால் அர்ஜென்டினா அணி மெஸ்சி காயத்தால் கவலையடைந்துள்ளது.

ஒரு வேளை நாளைமறுதினம் பிரான்ஸ்க்கு எதிரான இறுதிப் போட்டியில் மெஸ்சி 100 சதவீத உடற்குதியுடன் விளையாடவில்லை என்றால், அது அர்ஜென்டினாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.

டி மரியா அரையிறுதியில் காயம் காரணமாக விளையாடவில்லை. தற்போது அவர் உடற்தகுதி பெற்று விட்டதால் இறுதிப் போட்டியில விளையாட வாய்ப்புள்ளது.

இந்த உலகக் கிண்ணத்தில் மெஸ்சி 5 கோல் அடித்துள்ளார். 3 கோல் அடிக்க துணை புரிந்துள்ளார். அவருடன் எம்பாப்வேவும் 5 கோல் அடித்துள்ளார். இருவரும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...

கிறிஸ்துமஸுக்காக அலங்கரிக்கப்பட்ட மெல்பேர்ண் நகரம்

மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...

கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து பாதுகாக்க விக்டோரியர்ளுக்கு இலவச தடுப்பூசிகள்

கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். இந்த கொசு பருவத்தில்...

Gold Coast-ல் அதிகரித்துவரும் தற்கொலைகள்

Gold Coast-இல் இளைஞர் தற்கொலைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, குயின்ஸ்லாந்து சுகாதாரம், Gold Coast மனநல சேவையை மறுஆய்வு செய்ய அறிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த...

விக்டோரியாவில் உள்ள பல பள்ளிகளுக்கு மில்லியன் கணக்கான நிதி

விக்டோரியாவில் பள்ளிப் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அரசாங்கம் கூடுதலாக $22.5 மில்லியன் நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்த நிதியிலிருந்து 46 பள்ளிகள் பயனடையும் என்று கல்வி அமைச்சர்...

இலவச மின்சாரம் வழங்கும் Solar Sharer எவ்வாறு செயல்படும்?

அரசு அறிவித்துள்ள வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. Solar Sharer என்று அழைக்கப்படும் இந்த...