Breaking Newsமெஸ்ஸியின் காயத்தால் தடுமாற்றத்தில் அர்ஜென்டினா - FIFA உலகக்கிண்ணம்

மெஸ்ஸியின் காயத்தால் தடுமாற்றத்தில் அர்ஜென்டினா – FIFA உலகக்கிண்ணம்

-

கட்டாரில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்து திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

அந்தவகையில், நாளை நடைபெறவுள்ள 3-வது இடத்திற்கான போட்டியில் குரோசியா- மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அத்தோடு, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில்  பிரான்ஸ்- அர்ஜென்டினா அணிகள் மோதவுள்ளன.

அர்ஜென்டினா முதல் போட்டியில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான அந்த அணியின் தலைவர் மெஸ்சிக்கு இதுதான் கடைசி உலகக் கிண்ணம். இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

இதனால் மெஸ்சிக்கு உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்பில்லை என கருதப்பட்டது. ஆனால், அதன்பின் மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது சிறப்பான விளையாட்டால் தற்போது அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

குரோசியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். அதன்பின் அல்வாரெஸ் கோல் அடிக்க துணை புரிந்தார்.

இந்த போட்டியின்போது மெஸ்சி தசைப்பிடிப்பால் அவதிப்பட்டாராம். 100 சதவீதம் உடற்தகுதியுடன் இல்லையாம். இருந்தாலும் விளையாடுகிறேன் என மெஸ்சி தன்னம்பிக்கையுடன் விளையாடினாராம்.

தற்போது இடது காலில் தசைப்பிடிப்பு (hamstring) ஏற்பட்டதன் காரணமாக நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இதனால் அர்ஜென்டினா அணி மெஸ்சி காயத்தால் கவலையடைந்துள்ளது.

ஒரு வேளை நாளைமறுதினம் பிரான்ஸ்க்கு எதிரான இறுதிப் போட்டியில் மெஸ்சி 100 சதவீத உடற்குதியுடன் விளையாடவில்லை என்றால், அது அர்ஜென்டினாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.

டி மரியா அரையிறுதியில் காயம் காரணமாக விளையாடவில்லை. தற்போது அவர் உடற்தகுதி பெற்று விட்டதால் இறுதிப் போட்டியில விளையாட வாய்ப்புள்ளது.

இந்த உலகக் கிண்ணத்தில் மெஸ்சி 5 கோல் அடித்துள்ளார். 3 கோல் அடிக்க துணை புரிந்துள்ளார். அவருடன் எம்பாப்வேவும் 5 கோல் அடித்துள்ளார். இருவரும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவிலிருந்து உக்ரைனுக்கு மற்றொரு $100 மில்லியன் இராணுவ உதவிப் பொதி

ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் இராணுவ உதவிப் பொதியை அறிவித்துள்ளது. துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் உக்ரைனுக்கு ஒரு குறுகிய பயணத்தின் போது...

அதிக வரி விகிதம் கொண்ட வளர்ந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும்

கடந்த ஆண்டு வரி உயர்வால் ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு கூறுகிறது. வளர்ந்த நாடுகளில் அதிக வரி விதிக்கும்...

பிரசவத்திற்கான ஆஸ்திரேலியாவின் சிறந்த மருத்துவமனைகள் பற்றிய ஆய்வு

ஆஸ்திரேலியாவில் சராசரி டெலிவரிக்கு குறைந்தபட்சம் $726 செலவாகும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரசவத்திற்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள் சிறந்ததா என 1000 பெண்களிடம் ஃபைண்டர்...

ஆஸ்திரேலியாவில் சவாலாக மாறியுள்ள சமூக ஊடகங்கள்

குடும்ப வன்முறை முதல் பயங்கரவாதம் மற்றும் போர் அனைத்தையும் இணைக்கும் சமூக ஊடகங்கள் ஆஸ்திரேலியாவில் மிகவும் சவாலான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்கள் ஒரு...

ஆஸ்திரேலியாவில் சவாலாக மாறியுள்ள சமூக ஊடகங்கள்

குடும்ப வன்முறை முதல் பயங்கரவாதம் மற்றும் போர் அனைத்தையும் இணைக்கும் சமூக ஊடகங்கள் ஆஸ்திரேலியாவில் மிகவும் சவாலான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்கள் ஒரு...

சுட்டுக் கொல்லப்பட்ட Tiktok நட்சத்திரம்

ஈராக் சமூக ஊடக ஆர்வலரான ஓம் ஃபஹத் என்ற இளம் பெண் பாக்தாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈராக் உள்துறை அமைச்சகம் ஒரு...