Breaking Newsமெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு தட்டம்மை குறித்து எச்சரிக்கை!

மெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு தட்டம்மை குறித்து எச்சரிக்கை!

-

ஹெல்த் விக்டோரியா, மெல்போர்ன் குடியிருப்பாளர்களை தட்டம்மை நோய் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரித்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி மெல்பேர்ன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்து நாடு திரும்பிய ஒருவருக்கு அம்மை நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டமையே இதற்குக் காரணம்.

41 வயதான இந்த நபர் பல இடங்களுக்குச் சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 12 – 13 மற்றும் 16 ஆகிய நாட்களில் பயணம் செய்த இடங்களின் பட்டியலை விக்டோரியா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்தவர்கள் உடனடியாக சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் தோன்றிய 03-04 நாட்களுக்குள் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் தோன்றுவது அம்மை நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள பெரியவர்கள் அதிக ஆபத்துள்ள குழுக்களாக கருதப்படுகிறார்கள்.

இந்த வருடத்தில் இதுவரை விக்டோரியாவில் கண்டறியப்பட்ட தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை 06 ஆகும்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...