Sportsசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் முழு விபரம் - IPL...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் முழு விபரம் – IPL 2023

-

16-வது ஐ.பி.எல். T20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில். இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது.

கொச்சியில் நடைபெற்ற ஐ.பி.எல் மினி ஏலத்தில் 10 அணிகள்.167 கோடி(இந்திய ரூபா) செலவு செய்து 29 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 80 வீரர்களை ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த ஏலத்தில் சென்னை அணி எடுத்த வீரர்கள் முழு விவரம் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், ஏலத்தில் முதல் வீரராக, இந்திய வீரர் ரகானேவை அடிப்படை தொகையான ரூ.50 இலட்சத்திற்கு (இந்திய ரூபா) ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த தொடரில் இவர் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி வீரரான பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடி (இந்திய ரூபா) எனும் தொகைக்கு ஏலத்தில் எடுத்தது .

ஆந்திராவைச் சேர்ந்த 18 வயதான ஷேக் ரஷீத்தை அடிப்படை விலையான ரூ.20 இலட்சத்திற்கு(இந்திய ரூபா), சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

ஹரியானாவைச் சேர்ந்த நிஷாந்த் சிந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கிண்ணத் தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இவரை இறுதியில் ரூ. 60 இலட்சத்திற்கு (இந்திய ரூபா) சென்னை அணி சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேம்சனை அடிப்படை தொகையான ரூ.1 கோடிக்கு(இந்திய ரூபா) சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

சத்தீஸ்கரைச் சேர்ந்த சகலதுறை வீரரான அஜய் மண்டல் என்பவரையும், ஐதராபாத்தை சேர்ந்த பகத் வர்மாவையும் ரூ.20 இலட்சத்திற்கு(இந்திய ரூபா) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் முழு விவரம் வருமாறு:

எம்.எஸ்.டோனி, டேவான் கான்வே, ருதுராஜ், ராயுடு, சேனாபதி, மொயின் அலி , ஷிவம் துபே, ஹங்கர்கேகர், பிரிட்டோரியஸ், சான்ட்னர், ஜடேஜா, துஷார், முகேஷ், பத்திரன, சிமர்ஜீத், தீபக் சாஹர், சோலங்கி, தீக்ஷனா, ஸ்டோக்ஸ், ரஹானே, ரஷீத், நிஷாந்த் சிந்து, ஜமீசன், அஜய் மான்டால் , பகத் வர்மா

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் நிதி மோசடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?

ஆஸ்திரேலியர்களில் 10 பேரில் ஒருவர் அட்டை மோசடியை அனுபவித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. கிரெடிட்...

பிரபல கடையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா – அதிருப்தியடைந்துள்ள வாடிக்கையாளர்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான ஷாப்பிங் மாலில் மார்பளவு உயரத்தில் அலமாரிகளில் பொருத்தப்பட்ட புதிய கேமரா அமைப்பைப் பற்றி வாடிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வூல்வொர்த்ஸின் பல கிளைகளில்,...

ஈஸ்டர் வார இறுதியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையங்கள்

ஈஸ்டர் நீண்ட வார இறுதி காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 9 முதல் 29 வரை சுமார்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

அல்பானீஸின் வீட்டின் முன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நபர்

நியூ சவுத் வேல்ஸ் மத்திய கடற்கரையில் உள்ள பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வீட்டின் முன் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவின் தேசிய வீட்டுவசதி நெருக்கடியின் மீது...

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயரும் அறிகுறி

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். விக்டோரியன் அரசாங்க நிறுவனம் ஒன்றால் செய்யப்பட்ட வாடகைகளை திருத்தும் திட்டம் இதற்குக் காரணமாக...