Cinema‘தளபதி 67’ படத்தில் இணையும் கமல்ஹாசன் - விக்ரம்!

‘தளபதி 67’ படத்தில் இணையும் கமல்ஹாசன் – விக்ரம்!

-

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பட வேலைகள் தொடங்கி உள்ளது. இது விஜய்க்கு 67-வது படம். இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர்-நடிகை விவரங்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. இதில் சஞ்சய்தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

கதாநாயகியாக நடிக்க திரிஷா பெயர் அடிபடுகிறது. இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலும் விஜய்யுடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் படத்தில் நடிக்கிறீர்களா என்று பகத் பாசிலிடம் கேட்டபோது, அந்த படத்தில் நானும் இருக்கலாம் என்று கூறியுள்ளார். பகத் பாசில் ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து இருந்தார். விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார்.

கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் இருந்தார். அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தில் பகத் பாசில் நடித்த வில்லன் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்திய தகவல்கள் படி நடிகர் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோரும் தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் படத்தில் இணைய உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி 67 படத்தின் கிளைமெக்ஸ் காட்சியில் கமல்ஹாசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றலாம் என கூறப்படுகிறது.

அதுபோல் நடிகர் விக்ரம் விஜய் படத்திற்காக 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். தளபதி 67 படத்தில் ஏற்கனவே ஒரு வில்லன் பட்டாளமே இருக்க, விக்ரம் தான் அவர்களுக்கு எல்லாம் தலைமை வில்லனாம்.

லோகேஷ் கனகராஜின் படத்தில் வில்லன்கள் செம மாஸாக வருவார்கள். ஹீரோவை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு வில்லன்கள் கெத்து காட்டுவார்கள்.

டைரக்டர் லோகேஷ் கனகராஜால் தொடங்கபட்டது எக்ஷன்-கிரைம் திரில்லர் உலகமான லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (எல்.சி.யூ).

லோகேஷ் கனகராஜ் எல்.சி.யூ-வை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில திட்டங்களுடன் முன்னோக்கி கொண்டு செல்ல உள்ளார், இதில் முக்கியமாக தொடர்ச்சிகள் மற்றும் ட்விஸ்டுகள் இருக்கும்.

அவரது சமீபத்திய பல பேட்டிகளில் லோகேஷ் கனகராஜ், கைதி மற்றும் விக்ரம் ஆகிய தொடர்ச்சிகள் வரும் என உறுதிபடுத்தி உள்ளார்.

திட்டமிட்டபடி விடயங்கள் நடந்தால், தளபதி 67 வெளியான உடனேயே கைதி 2 தொடங்கும். பின்னர், அவர் விக்ரம் 2 படத்தை தொடங்குவார். இதைத் தொடர்ந்து சூர்யாவின் ‘ரோலக்ஸ்’ கேரகடர் படம் தொடங்கலாம்.

கமல்ஹாசன், கார்த்தி மற்றும் சூர்யா உட்பட எல்.சி. யூ வின் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும், பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ் மற்றும் முந்தைய எல்.சி. யூயில் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த மற்றவர்களும் வரவிருக்கும் அனைத்து படங்களிலும் தோன்றக்கூடும்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...